சுயமரியாதை..
பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா என்றதும், 786 அல்லாவின் டெலிபோன் நம்பரா என கேட்டதும் அதே கோஷ்டிதான்.
கன்னிக்கு குழந்தை பிறக்குமா? பிறந்தால் இயேசு என ஏற்பீர்களா என்று கூட தொடக்கத்தில் சொன்னார்கள்
கிறிஸ்துவத்தையும் இஸ்லாமையும் அவர்கள் லேசாக சாடினார்கள் ஆனால் எதிர்ப்பு பலமானதும் அமர்ந்தார்கள்
பின் ஒரு கட்டத்தில் அந்த மதங்கள் பக்கமே செல்லாமல் தவிர்த்தார்கள்
கிறிஸ்தவ மூட நம்பிக்கையினை, இஸ்லாமிய நம்பிக்கையினை தொட அவர்களுக்கு அவ்வளவு பயம்
அட அவ்வளவு ஏன்? முத்துராமலிங்க தேவரின் குருபூஜை பக்கமே செல்லமாட்டார்கள்
அவர்கள் ஏரியா எல்லாம் திருப்பி அடிக்காத பிராமணன் மேல் மட்டுமே..
அதன் பெயர்தான் பகுத்தறிவு, ஏழாம் அறிவு இன்னபிற ஏகபட்ட அறிவுகள்
அதெப்படி இனி வரும் மனிதனுக்காக 2 ஆயிரம் வருடத்துக்கு முன் ஒருவன் சாகமுடியும் என்பதும், இன்னும் சில விவகாரங்களை அவர்களின் பகுத்தறிவில் கிளறட்டும் பார்க்கலாம்
அந்த அச்சத்தின் பெயர் சுயமரியாதை..
இது தெரியாமல் கிறிஸ்த இஸ்லாமிய அன்பர்கள் அவரின் பகுத்தறிவினை சுயமரியாதையினை கைதட்டி வரவேற்கின்றார்களாம்
உங்களையும் உங்கள் மதத்தின் புனித கருத்துக்களையும் சுட்டால் எப்படி வலிக்கும்?
அப்படித்தான் இந்துக்களுக்கும் வலிக்கும்
“தன்னை போல் பிறரை நேசி..” என்றார் இயேசு
“உங்கள் வழிஉங்களுக்கு எங்கள் வழி எங்களுக்கு..” என மற்ற மதத்தாரிடம் கண்ணியமாக கூறியவர் நபி பெருமான்