சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது

சுப்பிரமணியன் சாமி இத்தாலியில் ராஜிவ் கொலைக்கு காரணமனவர் இருக்கின்றார் என சொன்னவுடன் மறுபடியும் ஈழபுலி அனுதாபிகள் உலகில் புயலடிக்கின்றது

ராஜிவ் கொலையில் பிரதான குற்றவாளிகள் பிரபாகரன், பெண் புலி அகிலா, மற்றும் பொட்டு அம்மான்

இதில் அகிலா இல்லை, அகிலா யார் என்றால் ராஜிவினை கொல்ல மனிதவெடிகுண்டாக பெண்ணை அனுப்பலாம் என திட்டமிட்டதே அவர்தான்

இதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தீக்குழந்தைகளை உருவாக்கி பெரும் இலக்கினை தகர்த்தவர் என பிரபாகரன் சொல்ல, இந்தியா கவனமாக குறித்தது

பொட்டு அம்மான் புலிகள் இயக்கத்து மூளை, அவர் பெயர் சிவசங்கரன். அம்மான் என்றால் தமிழில் மாமன் என பொருள்

கருணா அம்மான், பொட்டு அம்மான் என ஏகபட்ட அம்மான்கள் உண்டு. இதில் கடைசியாக இணைய ஆசைபட்டவர் சைமன் அம்மான், ஆம் நமது அங்கிள் சைமன்

பொட்டு அம்மான் இந்திய அமைதிபடை தாக்குதலில் வயிற்றில் புண்பட்டு சாவின் எல்லைக்கு சென்றவர், ராஜிவின் மீது குறிவைத்த முதல் நபர் அவர்தான்

சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் இடையே நடந்த வயர்லெஸ் உரையாடல்கள் எல்லாம் பெரும் சாட்சிகள்

2009ல் புலிகளை ஒடுக்க உலகம் தயாரானபொழுது புலிகள் அழிவதை விரும்பாத இந்தியா இறங்கி வந்தது

புலிகளும் இந்திய தலமையில் பேச்சுவார்த்தை என இறங்கிவந்தனர்

ஆனால் இந்தியா பொட்டு அம்மானை கைதியாக கேட்டது, புலிகள் முடியாது என்றார்கள் பேரழிவு நடந்தது, பிரபாகரனும் கொல்லபட்டார்

ஆனால் பொட்டு அம்மான் பற்றி எல்லோரிடமும் கனத்த மவுனம். அவர் தப்பினார் என்பதே நிஜம்

சர்ச்சைகளை தாண்டி பொட்டு ஜகஜால கில்லாடி, புலிகளின் வெற்றி தாக்குதல் எல்லாம் அவரின் கைவண்ணம், இந்திய அமைதிபடை அவரிடம்தான் திணறியது

ராஜிவ் கொலைக்கு மிக முக்கிய சூத்திரதாரி அவரே

ராஜிவ் கொலையினை முழுக்க ஈழதமிழர்களை வைத்தே செய்வது அவர் திட்டம், ஆனால் சிவராசன் நளினி, பேரரிவாளன் என இழுத்துவிட்டதில்தான் இத்தனை சொதப்பல்

இதனால்தான் அவனை மீட்க பிரபாகரனும் பொட்டுவும் கொஞ்சமும் விருப்படவில்லை, செத்து ஒழியட்டும் என அமைதியாயினர்

யுத்தத்தில் தப்பிய பொட்டு என்ன ஆனார் என்ற பெரும் கேள்வி இருந்தது, எரித்தியாவிற்கு அவர் தப்பினார் என்பதோடு முடித்தார்கள்

இப்பொழுது இத்தாலியில் அவர் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது