சூரியநாராயண சாஸ்திரிகள்

அவர் பெயர் சூரியநாராயண சாஸ்திரிகள்

ஆம் அவர் ஒரு பிராமணர், சுத்தமான ஆச்சாரியமான பிராமணர்

தனிதமிழ் இயக்கம், தமிழ்மொழி மேலான அபிமானங்கள் பெருகிய 1900களில் அவரின் தமிழ்பற்று சிலாகிக்க கூடியது

நிச்சயம் தமிழில் மறுமலர்ச்சி உ.வே சாமிநாதய்யர் காகித ஏட்டுக்கு ஓலைசுவடியினை மாற்றியபொழுது வந்தது. கல்வி முறை கொஞ்சம் வளர ஆரம்பித்த காலத்தில் சற்றும் சளைக்காமல் தமிழகமும் வாசிப்பு வழக்கத்தில் இறங்கியது

பெரியார் ஈரோட்டு சந்தையில் மஞ்சள் மண்டி நடத்தும் முன்பே இங்கு தமிழுக்கான எழுச்சி இருந்தது, கலைஞர் அப்பொழுது பிறக்கவே இல்லை

சைவ சித்தாந்த கழகங்கள் உட்பட ஏக பட்ட கழகங்கள் தமிழ் வளர்த்தன..

பல தமிழறிகர்கள் ஈழத்திலும் தமிழகத்திலும் உருவானார்கள், அவர்களில் ஒருவர்தான் சூரிய நாராயண சாஸ்திரிகள்

தூய தமிழனாக தன்னை உணர்ந்த அவர் செய்த முதல் வேலை தன் வடமொழி பெயரை தமிழுக்கு மாற்றியது

ஆம் சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயரை பரிதி மால் கலைஞர் என மாற்றிகொண்டார்

சாஸ்திரிக்கு தமிழ்பெயர் கலைஞர் என்றுதான் வரும்

இதை ஏன் சொல்கின்றோம் என்றால் “உதய சூரியன்” என்பது தமிழே அல்ல‌

திமுகவினர் மானமும் தமிழும் தெரிந்தவர்கள் என்றால் அதை “எழும் பரிதி” “எழும் ஆதவன்” என மாற்ற வேண்டும்

ஆம் உண்மையான தமிழர்கள் என்றால் மாற்றவும்

செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள்

அவர்கள் கட்சி சின்னமும் தமிழ் பெயர் அல்ல, “திராவிட “என்பதும் தமிழ்பெயர் அல்ல, அல்லவே அல்ல‌

ஆனால் கேளுங்கள், தமிழை மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது போல சத்தம்

அந்த பிராமணன் பரிதிமாற்கலைஞனுக்கு அறிவு இருந்தது, கூடவே மானம் இருந்தது