செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம்
செங்கல்பட்டு அருகே பன்னாட்டு விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயற்சி : செய்தி
இதுமட்டும் நடந்துவிட்டால் பழனிச்சாமி அரசின் மிகபெரிய சாதனையாக கருதபடும்
சென்னை விமான நிலையம் விரிவுபடுத்தபட்டே தீரவேண்டும் ஆனால் செய்யமுடியவில்லை. அச்சமயத்தில் அதனை உள்நாட்டு விமான நிலையமாக மாற்றி நகருக்கு வெளியே நவீன பன்னாட்டு விமான நிலையம் அமைக்கபட்டிருக்க வேண்டும்
ஆனால் கலைஞரோ, ராமசந்திரனோ, ஜெயாவோ அதுபற்றி யோசிக்கவில்லை, யோசித்தாலும் நில கையகபடுத்துதல் வாக்கு வங்கி இது போக மத்திய அரசின் கட்டுபாட்டில் வரும் விமான நிலையத்தால் நமக்கென்ன லாபம் என பல அரசியல் கணக்குகளால் அதனை செய்யவில்லை
பழனிச்சாமி அரசுக்கு வாக்குவங்கி பயமுமில்லை, அடுத்த தேர்தலை சந்திப்போமா என்ற கவலையுமில்லை இது போக மத்திய அரசின் ஆசியும் உண்டு
போதாதா இறங்கி சாத்துகின்றார்கள்
எந்தெந்த திட்டத்திற்கு எல்லாம் கலைஞரும் ஜெயாவும் யோசித்தார்களோ அதனை எல்லாம் அட்டகாசமாக செய்ய ஆரம்பித்தாயிற்று
போகிற போக்கில் பழனிச்சாமி பன்னீர்செல்வம் படத்தின் நடுவே காமராஜர் சிரித்தாலும் ஆச்சரியமில்லை
அடித்து கிளப்புகின்றார்கள் இரட்டையர்கள்
தமிழகத்தில் முதல்வர் எல்லாம் ஒரு விஷயமே அல்ல, டெல்லியே அதிகார பீடம். அது நினைத்தால் எந்த பொம்மையினை வைத்தும் ஆளமுடியும் என தமிழருக்கு மவுனமாக சொல்கின்றது டெல்லி.