செங்கோட்டையில் தேசியகொடி பறக்க வில்லை

ஒவ்வொரு நாட்டிலும் தேசிய வளாகம் அல்லது சதுக்கம் என்றொரு இடம் தலைநகரில் இருக்கும்

அங்குதான் அந்நாட்டு கொடி எந்நாளும் பறக்கும், மேற்கொண்டு சிறப்பு நாட்களில் ஆட்சியாளர்கள் கொடியேற்றி கொண்டாடுவார்கள்

இந்தியாவில் தேசிய சதுக்கம் என எதுவுமில்லை, மாறாக செங்கோட்டையிலே ஏற்றி பழக்கபட்டுவிட்டார்கள், அங்கு எந்நாளும் தேசிய கொடி பறந்துகொண்டிருக்கும்

இப்பொழுது செங்கோட்டை தனியாரிடம் பராமரிப்பிற்கு ஒதுக்கபட்ட நிலையில் அங்கு தேசியகொடி 3 நாளாக ஏற்றபடவில்லை என்கின்றார்கள்

அப்படி நடந்திர்ந்தால் அது தேசிய அவமானம்

நாட்டுபற்று என்பது இஸ்லாமியனிடமும், கிறிஸ்தவனிடமு காட்ட வேண்டியது அல்ல, இம்மாதிரி அடையாளங்களில் காட்டபட வேண்டும்

கன்னட தேர்தலை விட மகத்தானது தேசியகொடி

உடனே அந்த தவறை மத்திய அரசு சரிசெய்யட்டும்