சென்னையில் பிரியாணிக்காக அடிதடி
https://youtu.be/3QZhErNMbXQ
வடநாட்டில் இருந்து வந்த விஷயங்களில் தமிழரின் அமோக வரவேற்ற விஷயம் இரண்டு
ஒன்று பிரியாணி இன்னொன்று தலைவி குஷ்பு. இதில் குஷ்பு பற்றி பின்னர் பார்க்கலாம். இப்போதைய செய்தி பிரியாணி
அது முன்னரே வந்தாலும் அரசியல் விஷயங்களில் அடிபட்டது எப்பொழுது என்றால், திக திமுக காலங்களில்
என்னதான் திராவிடம், தென்னகம் , சுய மரியாதை, சுய உணவு என சொல்லிகொண்டாலும் வடக்கத்திய பிரியாணிக்கு அவர்களும் கட்டுபட்டுத்தான் கிடந்தார்கள்
கட்சிக்கு வசூல் செய்வதும் அதில் தவறாமல் பிரியாணி போடுவதுமாக திமுக செய்து கொண்டிருந்த காலங்கள் அவை,
கரூர் திருப்பூரில் அன்றே திமுகவின் பிரியாணி கூட்டங்கள் அமோகம் என்பதும், பெரியார் சொன்ன வெங்காயம் அங்கே கூடுதல் சுவை கொடுக்கின்றது என பலர் கலாய்த்ததும் அக்கால செய்திகள்
அதன் பின் குவார்ட்டரும் பிரியாணியும் தேர்தல் வெற்றியினை முடிவு செய்ததெல்லாம் பின்னாளைய வரலாறு
அப்படிபட்ட மகா முக்கிய பிண்ணணி கொண்ட பிரியாணி நேற்று மறுபடியும் பரபரப்பினை ஏற்படுத்திற்று
இந்த நாஞ்சில் சம்பத் போல பல கட்சி கண்டுவிட்டு சமீபத்தில் திமுகவில் இணைந்த யுவராஜ் என்பவர், பிரியாணிக்காக குத்துசண்டை போட அது வீடியோவாக பரவ, திமுக தலமை அவரை கட்சியினை விட்டே வெளியே செல்ல விசில் அடிக்க காமெடியான காட்சிகள் அரங்கேறின
சும்மா சொல்ல கூடாது, யுவராஜூக்கு குத்து சண்டை அட்டகாசமாக வருகின்றது. துல்லியமான குத்துகள் இதற்கு பயந்தே ஸ்டாலின் கட்சியினை விட்டு நீக்கி இருக்கலாம்
பிரியாணிக்காக குத்துபவர் நாளை எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என குத்த எவ்வளவு நேரமாகும் என அவரின் அரசியல் மூளை எச்சரித்திருக்கலாம்
ஆனாலும் திமுகவிற்கு ஆபத்து இருக்கின்றது, ஸ்டாலின் நீக்கினால் என்ன அழகிரி அந்த குத்துசண்டியனை அரவணைக்கலாம். அவர் இருக்க வேண்டிய இடமும் அழகிரி அணிதான். பார்க்கலாம்
எப்படியோ ஒரு காலத்தில் பரப்பாக இருந்து பின் மறைந்து போன திமுகவின் பிரியாணி பாரம்பரியம் நேற்று இரவு மீட்கபட்டிருக்கின்றது
இடையில் அதை கைபற்ற முயன்ற, அண்டாவோடு தூக்கி கொண்டு ஓடிய பாஜக, இந்து முண்ணணியிடமிருந்து பிரியாணி எங்கள் உரிமை என அது மீட்டு கொண்டது
இப்படிபட்ட குத்துசண்டை வீரனை அடுத்த டோக்கியோ ஒலிம்பிற்கிற்கு இந்தியா அனுப்பத்தான் வேண்டும் ஆனால் முதல் பரிசு தங்கபதக்கம் இல்லாமல் பிரியாணியாக இருக்க வேண்டும், அப்படி அறிவித்தால் நிச்சயம் முதலிடம் ரெடி
இதுதான் சிக்கல், இதை எப்படி ஒலிம்பிக் கமிட்டியிடம் சொல்ல முடியும்?
இப்படி திமுக, இந்திய ஒலிம்பிக் கமிட்டி என எல்லாம் அந்த மாவீரனின் குத்துக்களை பார்த்து திகைத்து நிற்கின்றது. இறுதி சுற்று படத்தில் இந்த வீரனை பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என இயக்குநர் சுதாவும் வருத்ததில் இருக்கலாம்.
அந்த பிரியாணி கடைக்காரர் அப்பிராணி போலிருக்கின்றது, குத்துசண்டையில் முடியாத பொழுது காதை கடித்து துப்பிட வேண்டும் என குத்துசண்டை மேதை டைசன் சொன்னது இவருக்கு தெரியாது போல
இதற்குத்தான் 4 விஷயங்களை படிக்க வேண்டும் என்பது
என்ன தமிழகமோ?, ஒரு கட்சி பிரியாணிக்காக அண்டாவினை தூக்கி கொண்டு ஓடுகின்றது, ஒரு கட்சி குத்து சண்டை இடுகின்றது
நாம் தமிழர் கேட்கவே வேண்டாம் அடிக்கடி சைமனே பிரியாணி செய்து தருவார் என சொல்லிகொள்வார்கள். சைமனை பார்த்தவுடன் அதை உறுதியும் செய்து கொள்ளலாம்
தமிழனாக தமிழ் உணவோடு உணர்வோடு வாழ்வோம் என முழங்கும் அவர்கள் அடுத்த இன உணவான பிரியாணி என்றால் மட்டும் அப்படியே வெள்ளை கொடி காட்டுவார்கள்
வீழ்ந்துவிடா வீரமும், மண்டியிடா மானமும் பிரியாணி என்றால் அப்படியே கவிழ்ந்து கிடக்கும்
அப்படி எல்லா கட்சியினரின் பொதுவான சின்னமாக பிரியாணி ஆகிவிட்டது
மலேசியா பல இன மக்கள் கலந்து வாழும் நாடு என்பதால் எல்லா வகை உணவுகளும் கிடைக்கும், ஆனால் ஒரிஜினல் சுவை என்பது வராது
மலேசிய உணவு யதார்த்தம் அப்படி, தமிழக உணவு கூட யாழ்பாணம் , கொழும்பு, மலையாளம் , கொஞ்சம் தமிழகம் என கலந்த கலவையாகவே கிடைக்கும்
இங்குள்ள பிரியாணி புளிசோறிலும் சேறாது, தக்காளி சோறிலும் சேராது, சில இடங்களில் வெள்ளைசோற்றுக்கு மஞ்சள் பொடி போட்டு கலந்து நடுவில் கோழியினை வைத்து பிரியாணி என சொல்லும் கொடுமை எல்லாம் உண்டு
இங்கு வந்த அஞ்சப்பர், தலைப்பாகட்டி கூட இங்குள்ள ஸ்டைலுக்கு மாறி கலப்பட பிரியாணியாக மாறிவிட்டார்கள். அஞ்சப்ப செட்டியார் வந்தால் அவர்களை நெஞ்சிலே மிதிப்பார்
ஆயினும் வேறு வழியின்றி அவ்வப்பொழுது விழுங்குவது உண்டு (ஆலையில்லா ஊரில் இலுப்பை சர்க்கரை என்பது போல, கலைஞர் இல்லா திமுகவிற்கு ஸ்டாலின் தலைவர் என்பது போல விழுங்கிவிட்டு வந்துவிடுவது உண்டு)
இந்த வீடியோவினை பார்த்துவிட்ட பின் மனதில் ஒருவித எழுச்சி உண்டாகின்றது, அது அற உணர்ச்சி அல்ல கோப உணர்ச்சி
இதனால் தியானம் பல செய்து மனதை அடக்கி கொண்டிருக்கின்றேன்
இன்னொரு முறை மலேசிய பிரியாணியினை உண்ணும்பொழுது இந்த வீடியோ நினைவுக்கு வராமல் இருக்க வேண்டும்
தப்பி தவறி வந்துவிட்டால் “டேய் இது பிரியாணியாடா..” என நமக்குள் இருக்கும் குத்து சண்டை வீரனும் விழித்துவிட வாய்ப்பு உண்டு