சென்னையில் மின்சார ரயில் விபத்து
சென்னையில் மின்சார ரயில் விபத்தில் நேற்று இருவர் உயிரிழந்தார்கள், அந்த அதிர்ச்சி விலகும் முன்பே இன்று 5 பேர் இறந்திருக்கின்றார்கள் அவர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள்
இதற்கு ஒரே காரணம் சம்பந்தபட்ட தரப்பின் அஜாக்கிரதையே
பேருந்துகளிலும், கார்களிலும், ஆட்டோ, பைக்களில் அனுமதிக்கபட்டவர்களை தவிர கூடுதல் நபர் இருந்தால் உடனே பிடிக்கின்றார்கள், அது நல்ல விஷயமும் கூட
ஆனால் மின்சார ரயியில் இதனை கண்டுகொள்வார் யாருமில்லை, இதனால் காலை நேர நெருக்கடி நேரத்தில் தொங்கி கொண்டுசென்ற இந்த மாணவர்கள் உயிரிவிட்டிருகின்றார்கள்
பழனிச்சாமி அரசு என்ன செய்யும்? சில லட்சம் நிதி என சொல்லிவிட்டு எட்டுவழி சாலை போட கிளம்பிவிடும்
சம்பந்தபட்ட தரப்பும், பயணிகளும் மிக பொறுப்பாக இருப்பதை தவிர இம்மாதிரி சிக்கல்களுக்கு தீர்வில்லை
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, இனி இம்மாதிரி கொடுமைகள் நடக்காமல் இருக்கட்டும்