சென்னை அருகே இரு கப்பல்கள் மோதிக் கொண்டன
சென்னை அருகே இரு கப்பல்கள் மோதிகொண்டதில் கடலெல்லாம் கச்சா எண்ணை மிதக்கின்றது
இது நிச்சயம் பெரும் சுகாதார அழிவு, கடலில் அதனால் இறந்த கடல்வாழ் உயிரினம் முதல், மீணவர் வாழ்வு வரை பாதிக்கபட்டிருப்பது கொஞ்சமல்ல
மீட்புபணி 5 நாட்களாக எப்படி நடக்கின்றது என்பதில்தான் இந்தியாவின் கேலிகூத்தே உலகிற்கு தெரிகின்றது, அவ்வளவு மெதுவான மீட்பு பணி எனும் காமெடி
அது என்னவோ தெரியவில்லை, வேகம் நமக்கு வராது. போர் என்றே இருகட்டும், என்ன சொல்வார்கள் தெரியுமா? 4 நாட்களில் விமானபடை தயார் என்பார்கள். அதாவது நாம் தயாராக 4 நாள் ஆகுமாம்
ராஜிவ் கொலை சிவராசனை பிடிக்கும் பொழுதும், மும்பையில் தீவிரவாதிகள் தாக்கும்பொழுதும் கமாண்டோ படை வந்த வேகத்தை பார்த்தால் நெல்விதைத்து அறுத்தே விடலாம், அவ்வளவு வேகம்
இன்று கடலில் நடந்த பேரழிவுக்கும் அதே சோம்பேறித்தனம், அதாவது பக்கெட்டில் அள்ளுகின்றார்களாம், சிப்பியில் ஏன் அள்ளவில்லை என்ற மர்மம் புரியவில்லை
இந்த விபத்துக்கு நிச்சயம் கப்பல் மாலுமிகளின் கவனகுறைவே காரணம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, ஆனால் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
இந்த நஷ்டஈடு யாரிடம் வசூலிக்க எண்ணுகின்றார்கள்? மீணவர் வாழ்வாதாரம், சுற்றுபுற சீர்கேட்டினை எப்படி மீட்டெடுக்க போகின்றார்கள் என்பதற்கு பதிலே இல்லை
ஜல்லிகட்டு காளையினை துன்புறுத்துகின்றார்கள் என பொங்கிய கூட்டத்தினை இன்று மீன்களும் ஆமைகளும் சிக்கலில் இருக்கும்பொழுது காணவே இல்லை
சுற்றுசூழல் அமைச்சகம், கடல்வளத்துறை அமைச்சகம், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் என ஒரு மங்குனிகளையும் அப்பக்கம் காணவில்லை
16 கிமீட்டர் தூரம் பரவியிருக்கும் அந்த எண்ணெய் படலம் நிச்சயமாக சென்னை கடற்கரைக்கு பெரும் சவால், மிக குறைந்த பணியாளர்களும், தன்னார்வலர்களும் மட்டுமே போராடி வருகின்றனர்
இந்த ஆமைவேக தேசத்தில் இந்த கச்சா எண்ணெய் கசிவுக்கே பக்கட், ஸ்பூன் என கடலுக்கு வலிக்காமல் மீட்புபணி செய்துகொண்டிருக்கும் நிலையில் ஏதும் அணுவுலை அசம்பாவிதம் என்றால் எப்படி எதிர்கொள்ள போகின்றார்களோ? என்பதில்தான் பெரும் அச்சம் மேலோங்குகின்றது
சென்னை கடல் விரைவில் கசடுகள் அகற்றபட்டு தன் இயல்பு நிலைக்கு திரும்பட்டும்.
இப்பிரச்சினைக்கு தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கபோகின்றதோ தெரியாது, முதல்வர் எழுதட்டும் நாம் பின்னால் அடுத்த கடிதம் எழுதுவோம் என சசிகலா காத்திருக்கலாம்
எத்தனை கடிதங்களை நாமே எழுதுவது சசிகலவே எழுதட்டும் என முதல்வர் சலிப்பில் இருக்கலாம்
ஜல்லிகட்டு போராட்டம் நடந்த கடற்கரையில் எப்படி எண்ணெய் கசிந்தது என தேசவிரோதிகள் மூளையில் விபரீத சிந்தனைகள் உதிக்கலாம், ஆனால் இம்மாதிரி விபத்துக்கள் சாத்தியமே
எப்படியோ சென்னை கடற்கரை என்றாலே அரசுகளுக்கு இப்பொழுதெல்லாம் மகா சிக்கல்.
இப்பொழுதுள்ள அமைச்சர்கள் பெரும் அறிவாளிகள், அதில் சிலர் சின்ன அம்மா எனும் பெரும் அறிவாளி முதல்வராக வேண்டும் என துடியாய் துடிப்பவர்கள்
அந்த ஆர்வகோளாறில் இந்த கசடுகளை அகற்ற 50 ஆயிரம் வாளிகள் வேண்டும் அதற்கு சின்னம்மா உதவ வேண்டும் என அவர்கள் சொல்லாத வரை நல்லது.
ஆனாலும் இன்னும் 5 நாட்களில் சென்னை கடலில் ஆயிலை அள்ளியதற்காக நன்றி என சொல்லி ஒரு கும்பல் போயஸ் கார்டனில் சின்னமாவுடன் போஸ் கொடுக்கும்
நாமெல்லாம் அதனை பார்த்து தொலைக்க வேண்டும்