சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது
இசைதுறையில் மிக பெரும் பங்களிப்பினை கொடுப்பதால் சென்னை சிறந்த கலாச்சார நகரமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கபட்டது
எத்தனை பெரும் இசை சக்கரவர்த்திகள் வாழ்ந்த பூமி இது, அக்காலம் முதல் எம்.எஸ் சுப்புலட்சுமி காலம், இளையராஜா காலம், ரகுமான் காலம் என அது மிகபெரும் அடையாளத்தை கொடுத்துகொண்டிருக்கின்றது.
சென்னை நகரின் பெருமையினை புரிந்துகொண்ட யுனெஸ்கோவிற்கு வாழ்த்துக்கள்
ஒருபுறம் மகிழ்ச்சி என்றாலும் இன்னொரு புறம் அச்சம் வருகின்றது
என்ன அச்சம்?
மோடியின் ஆட்சியில் சென்னை உலகபுகழ் பெற்றது என தமிழிசையும் ( தமிழ் இசை 🙂 ), பழனிச்சாமியின் பொற்கால ஆட்சியில் தமிழக தலைநகர் பெரும் இடம் பெற்றுவிட்டது என இவர்களும் கிளம்புவார்களோ?
என்ன செய்ய? கிளம்பத்தான் செய்வார்கள்.
இந்த ஸ்மூலியில் இம்சிக்கும் தமிழர்கள் கொஞ்சம் கவனிப்பது நல்லது, நீங்கள் எல்லாம் பாடுவதாக சொல்லி கொடுக்கும் இம்சை யுனெஸ்கோ கவனத்திற்கு சென்றால் இந்த அங்கீகாரத்தை ரத்து செய்துவிடுவார்கள்
அதனால் தயவு செய்து ஸ்மூலியில் பாடுவதை நிறுத்தி சென்னை பெருமையினை நிலைநிறுத்த உதவுங்கள்.