சென்னை மெரீனாவில் மூன்று கல்லறைகள்….

Image may contain: outdoor

தமிழக அரசியல் தளத்தினையே புரட்டி போட்டவர் அறிஞர் அண்ணா, அவரின் எழுத்தும் பேச்சும் அப்படி ஒரு தலைமுறையினையே கட்டி போட்டிருந்தது

உண்மையில் அவரின் சாதனை பெரிது, பெரும் மக்கள் கூட்டத்தை சில வருடங்களிலே தன்னை நோக்கி திரும்ப வைத்த அவரின் ஆற்றல் பெரிது

சுதந்திர் இந்தியாவில் மாநில கட்சிகள் தேசிய கட்சிகளை விரட்டி ஆட்சிக்கு வரமுடியும் எனும் அற்புதத்தை அவர்தான் முதலில் நிகழ்த்தி காட்டினார்

அச்சாதனை இந்தியாவில் அவரால்தான் நிகழ்ந்தது.

அவர் அடித்த அடி இன்றும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் தலை தூக்கவிடாதபடி வலித்து கொண்டிருக்கின்றது

இப்பொழுதெல்லாம் அவரின் கட்சிகளில் வாரிசுகள் மாறும் காலம்

ஓடி சென்று அவர் சமாதியில் வணங்குகின்றார்கள்

யார் யாரோ வணங்குகின்றார்கள், அவர்கள் அண்ணாவின் வாரிசுகளும் அல்ல, அவரின் கொள்கை வாரிசுகளும் அல்ல‌

அண்ணாவிற்கு குழந்தைகள் இல்லை, தமக்கையாரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் எனினும் அரசியலில் விடவே இல்லை

அவர் நினைத்திருந்தால் 4 பிள்ளைகளையும் செயல் தலைவர், சும்மா தலைவர், இருக்கை தலைவர், படுத்திருக்கும் தலைவர் என உருவாக்கி இருக்கலாம் செய்யவில்லை

கட்சியில் குடும்பமோ நட்புகளோ தலையிடுவதை அவர் விரும்பவில்லை

தமிழக அரசியல் பிதாமகனும் அண்ணவே,

பிழைக்க தெரியாத மகா பரிதாப அரசியல்வாதியும் அவரே

அப்படியும் அக்கட்சியில் ஒருவர் வாழ்ந்திருக்கின்றார்.

இப்பொழுது சென்னை மெரீனாவில் மூன்று கல்லறை இருக்கின்றது

ஆச்சரியமாக மூவருக்கும் பல ஒற்றுமைகள்

மூவருக்குமே குழந்தைகள் இல்லை,

மூவருமே சிகிச்சை பலனின்றி நோயால் செத்தவர்கள்,

மூவருமே தன் வாரிசு யார் என சொல்லாமல் செத்தவர்கள்

மூவருமே நன்றி கொன்றதற்கு ஓரளவு இலக்கணமானவர்கள்

அண்ணாவினை வளர்த்தவர் ஈவிகே சம்பத். அவரும் அண்ணாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் வளர்ந்தவர்கள்

ஆனால் திமுகவிலிருந்து சம்பத் திரையுலகினரால் விரட்டபட்ட பொழுது அண்ணா கண்ணீர் வடித்தாரே தவிர ஒன்றும் செய்யவில்லை, சம்பத்தினை கைவிட்டார் அண்ணா

எம்ஜிஆரை உருவாக்கி பெரும் இடம் பெற உழைத்தவர் அவர் அண்ணன் சக்கரபாணி, அவர் குடும்பத்தார் கட்சியில் அல்ல, இன்று எங்கிருக்கின்றார்கள் என்றாவது தெரியுமா?

இவ்வளவிற்கும் எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்தது அந்த குடும்பம்

கடைசி வரை அவர்களுக்கு பெரும் பிரதிபலன் எம்ஜிஆர் செய்யவில்லை, ஏன் என்றால் அப்படித்தான்

ஜெயாவின் நன்றிக்கடன் உலகறிந்தது, ஏறி வந்த அத்தனை ஏணிகளையும் மிதித்தே எறிந்து கடைசியில் யாருமின்றி மறைந்துவிட்டார்

இப்படியாக மூவரின் கல்லறைகளும் பல உண்மைகளை சுமந்து நிற்கின்றன‌

மூவரும் திரை துறையினை சேர்ந்தவர்கள், திரையில் அரசியல்வாதிகளை தேடும் படலத்தை அண்ணாவே தொடங்கி வைத்தார்

அப்படி அண்ணா ஏற்படுத்திய தாக்கம் இன்றும் சினிமாவும் அரசியலும் இணைந்து தொடர்கின்றது.

இன்னும் தொடரும்,

எந்த மாநில கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் நிச்சயம் அண்ணா சமாதிக்கு செல்வார்கள், காரணம் அவர் முத்திரை அப்படி

ஆனால் அவர் குடும்பத்தார் யாரும் செல்ல மாட்டார்கள்

ஒரு வளர்ப்பு மகன் தற்கொலை செய்தாயிற்று, தா.கிருட்டினன் பிரச்சினை வரும்முன்பே இருவர் எங்கோ சென்றாயிற்று

அண்ணாவின் பேத்தி பாஜகவில் இணைந்தார்

அண்ணாவின் சமாதியில் ஸ்டாலினும், சசிகலாவும் நாங்கள் திமுக வாரிசுகள் என அஞ்சலி செலுத்துகின்றனர்

அட என்ன இந்த அண்ணா?

பிள்ளைகள் இல்லை எனினும் வளர்ப்பு பிள்ளைகளையாவது அரசியலில் நுழைத்திருக்க வேண்டாமா?

சிலர் 30 வயதில் தத்தெடுத்து அவசர திருமணமும் செய்துவைத்த தமிழகத்தில் 4 பிள்ளைகளை தத்தெடுத்த அண்ணா ஒரு பிள்ளையினையாவது செயல் தலைவர் ஆக்கி இருக்க வேண்டாமா?

அட எவ்வளவு ஏன் டெல்லி பிரதிகளாக தன் குடும்பத்தாரில் 4 எம்பிக்களை அனுப்பி இருக்க வேண்டாமா?

எம்பிக்களை விடுங்கள்

யாரோ ஒரு நடிகை படிதாண்டா பத்தினி அல்ல என சொன்னார் அண்ணா, அவள் படியினை தாண்டி இருக்கட்டும், தாண்டாமல் இருக்கட்டும்

அவளோடு 4 மேடைகளில் சிரித்து போஸ் கொடுத்திருந்தால் அவளாவது வாரிசாகி இருக்க மாட்டாளா?

“வேலைக்காரி” என நாடகம் எழுதிய அண்ணா, வீட்டு வேலைக்காரியினைவாது 4 பேருக்கு அறிமுகபடுத்தி இருக்க கூடாதா?

காமராஜரோ, ராஜாஜியோ, ஏன் அமெரிக்க தூதர்களோ சந்திக்க வரும் போது என் வேலைக்காரி உங்களை அனுமதித்தாளா என கேட்டிருக்க கூடாதா?

ஒன்றும் செய்யவில்லை அண்ணா.

அப்படி செய்திருந்தால் நேரு குடும்ப காங்கிரஸ் போல, அண்ணா குடும்ப திமுக தொடர்ந்து வந்திருக்கும்

இப்படி பல திடீர் தலைவர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள்

மிகவும் விசித்திரமான விஷயங்கள் உண்டு

பெரியார் திருமணம் செய்கிறார், வாரிசு தேடுகின்றார் அய்யகோ இது அடிமை முறை, இயக்க விதி இது அல்ல‌ என சொல்லி கட்சி கண்டனர் அண்ணா குழுவினர்

இன்று கலைஞரின் வாரிசு அதே அண்ணா சமாதியில் கட்சி தலைவர் என சென்று நிற்கின்றது.

ஊழலுக்கு நான் நெருப்பு, பொதுவாழ்வில் தூய்மை வேண்டும் அதுதான் அண்ணா சொன்னார் என கட்சி தொடங்கினார் எம்ஜிஆர்

அதுவும் அண்ணா திமுக‌

அவர் கட்சிக்கு வாரிசாக பெரும் ஊழல் புகாரை சுமந்து நிற்கும் சசிகலா குடும்பம் மொத்தமாக சென்று அஞ்சலி செய்கின்றது.

இன்னும் என்னென்ன விசித்திரங்களை அண்ணா, எம்ஜிஆர் சமாதிகள் பார்க்க போகின்றதோ தெரியவில்லை

காலம் சொல்லும்

சொர்க்கக்கத்தில் அண்ணாவும் எஜிஆரும் அழுதுகொண்டிருப்பார்கள்

அண்ணா சொல்லி அழுவார் “வேலியில் சென்ற ஓணானை வேட்டிக்குள் விட்ட கதை ஆயிற்றே என் இதய கனியே..”

மூக்கை உறிஞ்சி எம்ஜிஆர் சொல்வார்

“நீங்களாவது ஓணானை விட்டீர்கள் அண்ணா

நான் டைனோசரை அல்லவா உள்ளே விட்டிருக்கின்றேன்….”


https://youtu.be/v3yXbWsGCrQ