சென்னை விரைவில் இயல்பாகட்டும்….
அம்மா உத்தரவுபடி மழை பெய்ததால் நன்றி என முன்பொரு காலத்தில் பேனர் வைத்த அந்த கலெக்டர் எங்கிருக்கின்றார் என தெரியவில்லை, ஆனால் அவரை தேடி வர்தா புயல் வந்திருக்கலாம்.
அம்மா மறைந்த துயரால் வங்ககடல் கொந்தளித்தது என இதுவரை யாரும் சொல்லவில்லை, சொல்லாமல் இருப்பது வரை அவனுக்கு நல்லது
வர்தா புயலுக்கு முன்பு மும்பையினை மிரட்டிய தமிழர் “வர்தா பாய்” (வரதராஜ முதலியார்) பெயரினை வைத்தார்களோ என்னமோ, அதே வேகம். அதே மூர்க்கம் ஆடி தீர்த்திருக்கின்றது புயல்
அரசும் சும்மா அல்ல, தன்னால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருகின்றது, இப்பொழுதுள்ள முதல்வரின் கைகள் அவிழ்த்துவிடபட்டிருக்கின்றன, கட்சி முடிவுகளை தவிர எல்லா முடிவும் அவரால் எடுக்கமுடிகின்றது
நமது ஆட்சி நிர்வாகம் வெள்ளையரால் நல்ல அடித்தளத்தில் அமைக்கபட்டுள்ளது, உச்சத்தில் யார் இல்லை என்றாலும் அதன் இயக்கம் தடையின்றி நடைபெறும் வகை அது. உத்தரவு மட்டும் போட்டுவிட்டால் போதும், அது நல்லவிதமாக செயல்படும்
ஜெயலலிதா இல்லாமல் ஆட்சி செய்ய திணறுகின்றார்கள் என்ற அவப்பெயர் வந்துவிட கூடாது என்பதில் இந்த ஆட்சி கண்ணும் கருத்துமாக இருப்பது தெரிகின்றது, நல்லது
மக்கள் எவ்விதத்தில் பயன்பெற்றால் என்ன? பெறட்டும்
மின்சாரம் தடை, இன்ன பிற சிக்கல்கள் என்று செய்திகள் வருகின்றன, இம்மாதிரி நேரங்களில் மின்சாரம் தடைபடத்தான் செய்யும், பல சிக்கல்கள் வரத்தான் செய்யும்
பல சேதங்களை தவிர்க்க முடியாது, அதுதான் நடந்திருக்கின்றது
இன்னும் மீட்புபணிகள் செய்ய வேண்டி இருக்கின்றது என செய்திகள் வருகின்றன, செய்யட்டும்
கப்பலில் உதவிபொருட்கள் வந்திருக்கின்றன, முதல்வர் பன்னீர்செல்வமும் புயல்பாதித்த பகுதிகளுக்கு சென்றிருக்கின்றார்.
சென்னை மக்களுக்காக பிரார்த்தித்து கொள்வோம், விரைவில் மீண்டு வரட்டும்
அரசின் நடவடிக்கைகளுக்கும், அதற்கு துணை நின்ற அதிகாரிகளுக்கும் நன்றிகள்
அரசின் எல்லா மீட்பு நடவடிக்கைக்கும் தொண்டர்களுடன் துணைநிற்போம் என சொன்ன முக ஸ்டாலினின் பொறுப்புணர்ச்சியும் வாழ்த்துகுரியது.
டிசம்பர் மாதம் என்னமோ சென்னைக்கு ராசியில்லாத மாதம், புயலோ, சுனாமியோ, பெருமழையோ அம்மாதத்திலேதான் அரசியலிலும், இயற்கையிலும் சென்னையினை புரட்டுகின்றன
ஆனாலும் சென்னை எந்த சிக்கலிலிருந்தும் எளிதில் மீண்டுவிடும் நகரம், சுதாரிக்க சில நிமிடம் வேண்டும் அதற்கு அவ்வளவுதான்
மீண்டுகொண்டிருகும் சென்னை விரைவில் இயல்பாகட்டும்.
“ஏழைகளுடன் பிரதமர் போர்” : ராகுல் பேச்சு
பிரதமரின் போர் இருக்கட்டும், தமிழக காங்கிரசில் பெரும் போர் நடந்துகொண்டிருக்கின்றது, பீட்டர் அல்போன்ஸ் பெட்டி கட்டுகின்றார், குஷ்பூ கட்சி மாறலாம் என்கின்றார்கள்,
திருநாவுக்கரசரின் தலமை அந்த போரினை நடத்திகொண்டிருக்கின்றது.
அந்த பெரும் போரில் தமிழக காங்கிரசே காணமல் போகலாம், அதனை பற்றி எல்லாம் இவருக்கு கவலை இல்லை