செயற்கை பதுக்கலை தடுக்கட்டும்
பல நாட்டு அரசுகள் கொரோனா மேலான நடவடிக்கையில் அணுகுமுறையினை மாற்றிவிட்டன
அதாவது காவல் அமைப்புகளும் சுகாதார துறையும் கைகோர்த்து ஒருங்கிணைந்து செயல்படுகின்றன, உதாரணத்துக்கு கான்ஸ்டபிள் நர்ஸ் அடங்கிய குழு ஆங்காங்கே சுற்றி வருகின்றது அல்லது கடைகள் வாசலில் நிறுத்திவைக்கபடுகின்றனர்
வாகன சோதனையும் உண்டு
அங்கேயே மக்களை வெப்பநிலை சோதிக்கபட்டு இதர சோதனைகள் செய்யபட்டு கொஞ்சம் அறிகுறி தெரிந்தாலும் தூக்கி போட்டு சென்றுவிடுகின்றார்கள்
இன்னும் சூழல் சரிவரா நிலையில் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு அதிரடியாக மாறிவிட்டன, இது பலனளிக்கின்றது
இந்தியாவிலும் இது அவசரமாக செய்யபட்டால் நல்லது
காவல் துறையும் சுகாதார துறையும் இணைந்து செயல்படட்டும்
இந்த நெருக்கடியான சூழலில் இருவகை கொள்ளை கும்பல்கள் இருக்கின்றன அவை ஆளில்லா கடைகளை உடைத்து திருடும் கும்பல் அப்படியே வீடு வீடாக கொரோனா அதிகாரி என புகுந்து கொள்ளையிடும் கும்பல்
இது மர்மமானது
இன்னொரு கோஷ்டி அரசு உரிமையுடன் கொள்ளை அடிக்கின்றது அவர்களுக்கு வியாபாரிகள் என பெயர்
கொரோனாவில் நாம் செத்துவிடலாம் அல்லது நம் வாடிக்கையாளர் செத்துவிடலாம் என்ற அச்சத்தில் மிக கடுமையான விலையில் பொருட்களை விற்கின்றார்கள்
அரசு இதுபற்றி உடனே நடவடிக்கை எடுத்து சம்பந்தபட்ட கடைகள் மேல் நடவடிக்கை எடுக்கட்டும், செயற்கை பதுக்கலை தடுக்கட்டும்