செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்
இந்த ஜெயக்குமார் பட்ஜெட் வாசித்தபொழுது இது சரியில்லை நான் போடுகிறேன் சிறந்த பட்ஜெட் என அறிவாலயத்தில் செயல்தலைவர் “மாதிரி பட்ஜெட்” போட்டு வாசித்தால் கைதட்டலாம்
சும்மா “மாதிரி சட்டமன்றம்” என அவரே முதல்வர் போல வீற்றிருந்து 4 பேர் கைதட்டுவதெல்லாம் சகிக்கவில்லை
முன்பெல்லாம் திமுகவில் திருச்சி சிவா முதல் டி.ஆர் பாலு வரை பொளந்துகட்டுவார்கள்
ஆற்காடு வீராசாமி முதல் கடைநிலை தொண்டன் வரை உற்சாகமாய் பேசுவான், கலைஞரும் பேசவிட்டு ரசிப்பார்
இப்பொழுதெல்லாம் ஸ்டாலின், கனிமொழி குரல் தவிர ஒரு குரலையும் அவர்கள் அனுமதிப்பதில்லை . இதெல்லாம் நல்ல விஷயம் அல்ல
1989ல் புலிகளுக்கு இடம் கொடுத்து சமூக அமைதியினை கெடுக்கின்றார், இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்கின்றார், சமூக விரோதம் இது என்றுதான் கலைஞர் அரசை கலைத்தார்கள்
இப்பொழுது தூத்துகுடி போராட்டத்தில் சமூக விரோதிகள் அதிகம் கலந்துவிட்டார் என்கின்றார்கள்
அப்படியானால் இங்கு சமூக விரோதிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றால் பழனிச்சாமி அரசை டிஸ்மிஸ் செய்தால் என்ன என கேட்டால் ஒரு பயலையும் காணவில்லை
சொந்த ஊரில் காடுவெட்டி குருவுக்கு மணி மண்டபம்- அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு
எவ்வளவு முக்கியமான விஷயம்?
அங்கே பீனிக்ஸ் பறவை வடிவமாம், இங்கு மாம்பழ வடிவமா இல்லை ஓநாய் வடிவமா என இன்னும் தெரியவில்லை
பாமக , ஆம் நாங்கள் வன்னியர் கட்சியேதான் என உலகிற்கு உரத்து சொல்லும் நேரமிது.