செய்தி அவியல்…
பெரும் ஆண்மீக தத்துவத்தை ரஞ்சிதாவினை தவிர மற்ற பெண் சீடர்களுக்கு சுவாமிகள் விளக்கிகொண்டிருக்கின்றார்
ரஞ்சிதா ஏற்கனவே முக்தி நிலை அடைந்துவிட்டார், அதனால் தேவையில்லை
படத்தில் ஒரு சிஷ்யையின் முகத்தில் ஆனந்த ஒளி அப்படி ஜொலிக்கின்றது
சுவாமி மறுபடியும் படுக்கை அறை கேமராவில் சிக்கி இருக்கலாம், அதனால் இப்படியான படங்களை கசிய விட்டு சுவாமிஜிக்கு நெருக்கடி கொடுக்கின்றார்களோ என்னமோ?
மிக ஆக்ரோஷமானவர்கள் அமைதியாகிவிட்டால் “நீ திரும்பி வரணும், பழைய பன்னீர் செல்வமா வரணும்” என சத்திரியன் டயலாக் பேசுவார்கள்
கடந்தமாதம் வரை அப்படித்தான் கலாய்த்தார்கள்
இப்பொழுது காலம் மாறிவிட்டது
“பழைய பன்னீர் செல்வமா வரணும், இப்படி பதவியினை விட மாட்டேன் என அடம்பிடிக்க கூடாது
தைரியம் எல்லாம் வரக்கூடாது.
கார்டனுக்கு வரணும், பழைய பன்னீர் செல்வமா வரணும்” என அழைப்பு செல்கின்றதாம்
டயலாக் சூழ்நிலைகள் எப்படி எல்லாம் மாறுகின்றன
எப்படியோ “பழைய பன்னீர் செல்வமா வரணும்” எனும் வசனம் டிரண்ட் செட்டிங் ஆகிவிட்டது
சசிகலாவினை விமர்சிப்பவர்கள் ஐடிக்கள் கண்காணிக்கபடுகின்றன முகநூல் செய்தி
அட பதர்களா? இதற்கு ஏன் இங்கு வந்து கண்காணிக்க வேண்டும்? விகடன் பத்திரிகை கிழிக்காத கிழியா? இன்னும் பல பத்திரிகைகளும் கட்சிகாரர்களும் சொல்லாத கதைகளா?
சசிகலாவினை பற்றி யாருக்கு தெரியாது?
எல்லா கதைகளையும், பழம் கதைகளையும் பத்திரிகைகளே எழுதி தள்ளுகின்றன
அவ்வளவு ஏன் சில தொலைகாட்சிகளில் அதிமுகவினர் கேட்காத கேள்விகளா?
விகடன் அலுவலகம், சசிகலா புஷ்பா வீடு, தீபா கோஷ்டி, என இன்னும் ஏராளமான விஷயங்கள் சென்னையிலே இருக்க, அதனை எல்லாம் விட்டு விட்டு
முகநூலில் வந்து கண்காணிக்கின்றார்களாம்
உணவகங்களில் சேவை வரிக்கு அவசியமில்லை என சொன்னவுடன் பலர் மகிழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்
இன்னும் 2 மாதங்கள் தான்
அதன் பின் ஜிஎஸ்டி எனப்படும் வரியில் மொத்தமாக போட்டு தாக்குவார்கள், அது இந்த சேவை வரியினை விட அதிகமாக இருக்கும்
2 மாதம் சும்மா விட்டிருக்கின்றார்கள் அவ்வளவுதான், பின் சேர்த்து பிடுங்கிவிடுவார்கள்
அதற்குள் எவ்வளவு அழிச்சாட்டியம்