“சேவ் காஷ்மீர்” என இந்த தமிழுணர்வு இம்சை கோஷ்டி அன்று கிளம்பியது
கொஞ்சநாளைக்க்கு முன்பு சேவ் காஷ்மீர்” என ஒரு கோஷ்டி கிளம்பியது, யாரென கண்டால் இந்த தமிழுணர்வு இம்சைகள் “
அங்கிள் சைமன் கூட யாசின் மாலிக்கை எல்லாம் அழைத்து கூட்டம் போட்டு இந்திய எதிர்ப்பினை காட்டிகொண்டிருந்தார்
“காஷ்மீரில் ராணுவத்தை வெளியேற்று, கொலையினை நிறுத்து ஏ காஷ்மீர் மக்களே உங்களுக்கு நாங்கள் ஆதரவு..” என ஏகபட்ட அழிச்சாட்டியம்
இப்பொழுது ஆசிபா விவகாரம், தமிழ் இளைஞர் கல்வீசி கொல்லபட்டு ஏகபட்ட விஷயம் நடக்கின்றது
இப்பொழுது பலர் காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலபடுத்தபட வேண்டும், இன்னும் பல ராணுவ குழுக்கள் இறக்கபட வேண்டும் என குரல் கொடுக்க ஆரம்பித்தாயிற்று
இந்த “காஷ்மீரில் ராணுவத்தை திரும்ப பெறு” என ஒப்பாரி வைத்த ஒரு தமிழுணர்வு பயலையும் இப்போது காணவே இல்லை