சைமன் சித்தர்
சில சித்தர்கள் சில பச்சையான வார்த்தைகளை பேசுவார்கள் என்பார்கள், அற்ப மானிடனே நீ என்ன பெரிய …டா?
பு .. மகனே,
….. வழியாக வந்த அற்ப உடல்தான் இது? உனக்கென்ன ஆணவம்? என சொல்வார்களாம்,
இதனை சில சித்தர் பாடல்களில் நிரம்ப படிக்கலாம் . சில இடங்களில் பட்டினத்தார் கூட சொல்லியிருப்பார்
அனுபவத்தால் நொந்து, மனம் வெறுத்து, வாழ்வினை வெறுத்தவர்கள் அப்படி சித்தர்களானார்கள், அப்படி தத்துவம் பேசினார்கள்
அப்படி தமிழகதில் வாழும் முன்னாள் சேகுவேரா தம்பியாகவும், பெரியார் பேரனாகவும், அதற்கு முன்பு பசும்பொன் தேவரின் சீடராகவும் இருந்து இந்நாள் பிரபாகரன் தம்பியாக இருக்கும் சைமனுக்கு , மனம் நொந்து, வெறுத்து ஞானம் வந்து விட்டது
அவர்தான் எத்தனை வேடம் போடுவார், எத்தனை விதமாக பேசுவார்? எத்தனை நாள்தான் பேசிவிட முடியும்? அவரும் பாவம், மனம் வெறுத்து சித்தராகிவிட்டார்
அவர் திட்டி தீர்க்க கலைஞரும், காங்கிரசும், ராஜபக்சேயும் ஆட்சியில் இல்லை. அவர்கள் திரும்ப வரும் வாய்ப்புமில்லை அது வேறு கடும் வெறுப்பு
மனம் வெறுத்த அங்கிள் சைமன், சித்தன் சைமனாகி விட்டார், இது தெரியாமல் யாரோ குமரி மாவட்டத்துக்கார போனில் சீமானை அழைத்திருக்கின்றார்,
கடும் தவத்தில் இருந்த சைமன் சித்தர், தவம் கலைந்த கோபத்தில் கோபபட்ட சைமன் சித்தர், போனை வையடா பு… மகனே என சொல்லிவிட்டார்
இதற்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம்?, சித்தர் சைமன் அப்படித்தான் சொல்வார், அவர் சித்தராகிவிட்டார். சுடுகாட்டு சித்தரின் இயல்பு அப்படித்தான்,
ஏற்கனவே நாடு சுடுகாடாயிற்று என சொல்லிகொண்டுதான் இருந்தார், அப்பொழுது நமக்கெல்லாம் அவர் சுடுகாட்டு சித்தரான விஷயம் தெரியவில்லை, இப்பொழுது தெரிந்துவிட்டது
இனி படுபயங்கர வார்த்தைகள் அந்த சித்தனிடமிருந்து வரும்..
அப்படி சித்தர் என்ன சொல்லிவிட்டார் என தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்களும் போனில் அவரை அழைத்து பார்க்கலாம்
தாமரை பூவிற்கு இன்னொரு பெயர் உண்டு, சமஸ்கிருத பெயர் அது.
இனி தாமரை பூவை கையில் வைத்து கொண்டு இதனை பூ என சொல்லலாம், புய்பம் எனவும் சொல்லலாம் நான் போனில் சொன்னபடியும் சொல்லலாம் என சீமான் சித்தர் விரைவில் சொன்னாலும் சொல்வார்.