சைமன் செய்வது சரி என்றால் நிச்சயம் ரஜினி வந்ததும் சரியே

1979 முதல் 30 ஆண்டு காலம் ஈழப்போர் நடந்தது, இந்திய தலையீடு , பிரபாகரனின் சென்னை வாசம், எம்ஜிஆர் காலம், கலைஞரின் நகர்வு, இந்திரா அமிர்ந்தலிங்கம் சந்திப்பு அமைதிபடை காலம்,ராஜிவ் கொலை , சந்திரிகா தடை, ஆனையிறவில் புலிகள் வெற்றிபெற்று இந்திய அங்கீகாரத்திற்கு காத்திருந்த காலம், சர்வதேச அமைதி பேச்சு என ஏராள விஷயங்கள் நடந்தன‌

அன்றெல்லாம் காணாமல் போய்விட்டு 2008ல் வந்து ஈழம் என் சொந்தம், பிரபாகரன் என் அண்ணன் குதியோ குதி என குதித்தவர் சீமான், இன்னும் குதி அடங்கவில்லை

ஈழப்போர் உக்கிரம் அடைந்த நிலை, அழிவை எட்டிய நிலை, மறுபடி ஆனையிறவில் புலிகள் வென்று ஈழம் அமைக்கும் நுனியில் இருந்த அந்த பொற்காலத்தில் எல்லாம் பாரதிராஜாவிடமும் பாலுமகேந்திராவிடமும் கேமரா தூக்கி கொண்டு திரிந்தவர் இந்த சைமன், யார் மறுக்க முடியும்?

அவர்தான் ரஜினி இவ்வளவு நாளும் எங்கு சென்றார் என கேட்கின்றாராம்

கூடங்குளம் போராட்டம் விஸ்வரூபம் எடுக்கும் முன் இந்த உதயகுமார் எங்கிருந்தார் என்றே தெரியாது , ரஜினியாவது ஜெயா முன்னாலே இங்கு குண்டு கலாச்சாரம் வந்தது என 1996லே அரசியல் பேசியவர், மூப்பனாருக்கே வாய்ஸ் கொடுத்தவர்

இந்த உதயகுமார் அப்பொழுது எங்கிருந்தார்? அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் வேலை செய்துகொண்டிருந்தார்

இவர்கள் எல்லாம் திடீரென வந்து குதிக்கலாமாம், ஆனால் ரஜினி வந்தால் “ஏய் 2ம் வயதிலே ஏன் போராட வரவில்லை?” என கேட்பார்களாம்

சைமன் செய்வது சரி என்றால் நிச்சயம் ரஜினி வந்ததும் சரியே

ரஜினி திடீரென வந்தது தவறு என்றால், அதனை கண்டிக்கும் தகுதி அங்கிள் சைமனுக்கு, உதயகுமாருக்கு எங்கே இருக்கின்றது?