சொல்லி அடிக்கும் சூரன் பாரு….
சுனாமி காலத்தில் உள்வாங்கி பொங்கும் கடல்போல பன்னீர் பொங்கியிருகின்றார், உள்ளே விட்டு அடித்திருக்கின்றார்
பாட்ஷா படத்தில் , ரத்தம் சொட்ட சொட்ட அடிவாங்கிய ரஜினி, திடீரென ஆனந்தராஜ் கும்பலை துவைத்து எடுக்கும்பொழுது எப்படி எல்லோரும் வியப்பாக பார்ப்பார்களோ அப்படி தமிழகமும் பன்னீரை பார்த்து கொண்டிருக்கின்றது.
தமிழகம் என்ன இந்தியாவே பார்த்துகொண்டிருக்கின்றது.
முன்பு “இவன் ஜாதகத்த மாத்தி வச்ச பாவி யாரடா..ஓஓஓ…” என அழுதுகொண்டிருந்த தமிழகம், இப்பொழுது உற்சாகமாக இப்படி பாடுகின்றது
“ஏய் பன்னீர் பாரு..பாரு
வேட்டி சட்டை இரண்டும் போட்டு
சீறி வரும் சிங்கம் பாரு
பன்னீர் திட்டம் ஜெயிக்கும் பாரு
சசி பயலுக வேலை எல்லாம்
சொல்லி அடிக்கும் சூரன் பாரு”
தமிழகத்தின் தற்போதைய டாப் ஹீரோ பன்னீர் செல்வம்.