சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் எஎந கேட்போருக்கு ….

சோனியா அப்படி என்ன சாதித்துவிட்டார் என சிலர் கேட்கின்றார்கள், அது கொஞ்சம் சில நாட்டு அரசியல்களை பார்த்துவிட்டு வந்தால்தான் தெரியும்

பக்கத்து நாட்டு பாகிஸ்தானையே எடுத்துகொள்ளுங்கள். அங்கு பூட்டோ என்றோருவர் இருந்தார். பாகிஸ்தானுக்கு அவர் நல்லதைத்தான் செய்தார். அணுகுண்டு இல்லா பாகிஸ்தானை இந்தியா நேரம் போகாத பொழுது எல்லாம் இனி போட்டு அடிக்கும் என்பது வங்கப்போருக்கு பின் விளங்கிற்று

அணுகுண்டு செய்வது என தீர்மானித்து, அதில் இறங்கி சிலரை நம்பி பின் அமெரிக்கா பாகிஸ்தானின் அணுதிட்டத்தை தூக்குவதா இல்லை பூட்டோவினை தூக்குவதா? என திட்டமிட்டதில் சிக்கினார் பூட்டோ. சொந்த தளபதியால் தூக்கிலும் இடபட்டார்

அவரின் மகள் பெனசிர், அவரும் மக்கள் அபிமானம் பெற்றிருந்தார். மதகட்டுபாடு எனும் கட்டுபெட்டிதனத்திலிருந்து பாகிஸ்தானை விடுவிக்க எண்ணியவர், அவரும் கொல்லபட்டார்

இருவருமே பாகிஸ்தானின் நலனுக்காக உயிரிவிட்டவர்கள், அதில் சந்தேகமில்லை, மாற்றான் தோட்டத்திலும் உண்மை விசுவாசிகள் உண்டு

ஆனால் பெனசிருக்கு பின் கட்சியினை தூக்கிபிடித்திருக்க வேண்டிய அவர் கணவர் சர்தாரி நமது ஊர் ஜெயா சசிகலா பாணியில் இறங்க அந்த கட்சிக்கான அபிமானமே போயிற்று

பெனசிரும், பூட்டோவும் செய்த தியாகம் எல்லாம் வீணாயின‌

ஆனால் இந்தியாவில் என்ன நடந்தது அம்மாதிரி இந்திரா, ராஜிவ் படுகொலைகளுக்கு பின் வந்த சோனியா தன் பொறுப்பில் மிக கவனமாக இருந்தார்

காங்கிரஸின் பெயரோ கட்சியின் பெயரோ தன் பெயரோ பெரிதும் பாதிக்கபட அவர் விடவில்லை. மிக அழகாக காத்து நின்றார்

நீண்டகால காங்கிரஸ் ஆட்சிக்கு மக்கள் கொஞ்சநாள் ஓய்வு கொடுத்திருக்கலாம், இப்பொழுது பாஜக பண்ணும் அழிச்சாட்டியத்தில் மறுபடி காங்கிரஸ் தானாக பதவிக்கு வரும்

ஒரு பெரும் குற்றசாட்டோ இல்லை பெரும் சர்ச்சைகளோ அதாவது பெனாசிரின் கணவர் போல தகாத பெயரை சம்பாதித்திருந்தாலோ அது நடக்குமா? நிச்சய்ம் நடக்காது

அந்த பெறும் சறுக்கலை கட்சி சம்பாதிக்காமல், அந்த‌ அளவு மிக கண்ணும் கருத்துமாக கட்சியினை நடத்தினார் சோனியா

பூட்டோ, பெனசிரின் தியாகத்தை சர்தாரி வீணாக்கியது போல இந்திரா, ராஜிவின் தியாகத்த்தை சோனியா வீணாக்கவில்லை, அதுதான் சோனியாவின் வெற்றி

பல நாட்டு அரசியலில் வாரிசுகள் பெறும் சறுக்கலை சந்தித்ததை பார்த்துவிட்டு சோனியாவினை நோக்குவீர்களானால் அவரின் பெரும் சாதனையும், பெருந்தன்மையும் விளங்கும்