ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது

No automatic alt text available.

ஜப்பானுக்கும் சீனாவிற்கும் அறவே ஆகாது, “என்றேனும் ஒருநாள் உன்னைபிடித்து உன் மூஞ்சில குத்தல, இது சீனா இல்லேடா” என அனுதினமும் சீனா சொல்லிவிட்டுத்தான் கண் விழிக்கும்

ஜப்பான் சீனாவில் முன்பு செய்திருக்கும் அட்டுழியம் அப்படி, இப்பொழுது சீனா வல்லரசு என்பதால் திருப்பி அடிக்க துடிக்கின்றார்கள்

ஆனால் அமெரிக்க ஆதரவு ஜப்பானுக்கு இருப்பதாலும், ஜப்பானும் பாஷாபாயாக இல்லாமல் மாணிக்கமாக இருப்பதாலும் முறைப்போடு நின்றுகொள்கின்றார்கள்

இதில் சீனா ஜப்பானை மிரட்டும் பெரிய காரியங்களில் அரியவகை மணலும் உண்டு

என்னதான் ஐசி சிப், எலக்ட்ரானிக்ஸ் என சொல்லிகொண்டாலும் அவை எல்லாம் வானத்தில் இருந்து வருவதோ அல்லது மந்திரத்தில் வருவது அல்ல. எல்லாம் அரியவகை மண்ணில் இருந்து வருவது

ஜப்பான் எலெக்ட்ரானிஸ் துறையில் முன்னணியில் நிற்க அம்மணல் அவசியம். சீனாவில் அது ஏராளம். ஜப்பானில் சுத்தமாக இல்லை

இதனால் எந்த முறுகல் என்றாலும் மண் தரமாட்டேன் என மிரட்டியே சீனா பயமுறுத்தியது

இந்த வெறியில் தன் நாடு முழுவதும் தேடிவிட்டு கடலிலும் அரியவகை மண் தேடிய ஜப்பானுக்கு தன் கடல் அடியில் அவ்வகை மணல் குவிந்திருப்பது நேற்று தெரிந்துவிட்டது

இதனால் “நீ மண்ணாய் போ..” என சீனா நோக்கி சாபமிட்டவாறு தன் கடலடி மண் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கின்றது

ஆனால் கடலடிவரை சென்று எடுக்கவேண்டும் அல்லவா? கொஞ்சம் சிக்கல்தான் என்றாலும் அதற்கான செயல்திட்டத்தில் இறங்கிவிட்டார்கள்

அரிய மணல் தேசங்களுக்கு இடையே முக்கிய விவாதபொருளானது அங்கே

இங்கே எப்படி?

ஆற்றுமணலை எல்லாம் அரசு விற்க, அரிய வகை தாது மணலை தனியார் விற்றுகொண்டிருந்தார்கள்

பின் சீனா உருப்படுமா? இந்தியா உருப்படுமா?

எப்படியோ இப்பொழுது தாதுமணல் தொழில் முடக்கபட்டிருக்கின்றது இல்லாவிட்டால் “அண்ணாச்சி கும்பல்” நீர் மூழ்கி சகிதம் வங்க கடலுக்குள் இறங்கி தேட ஆரம்பித்திருக்கும்