ஜப்பான் சூறாவளி

கேரளாவினை தொடர்ந்து அடைமழையில் சிக்கி இருக்கும் நாடு ஜப்பான்

சூறாவளியும் மழையுமாக பெரும் வெள்ளத்தை சந்தித்திருகின்றது, வடக்கு ஜப்பானில் கடும் நெருக்கடி

நமது பக்கத்து நாடாக இருந்தால் நூடுல்ஸும், சுஷி எனும் அரிசி கேக்கும் செய்து அனுப்பலாம் , அவர்கள் சமையல் மிக எளிது, பன்றியோ மீனோ அடுப்பில் வைத்தவுடன் எடுத்துவிட வேண்டும்

அடுப்பில் வைக்காவிட்டால் கூட சிக்கல் இல்லை, அவ்வளவு எளிது

ஆனால் தொலைதூரத்தில் இருப்பதால் இங்கிருந்து நிவாரணப்பொருள் அனுப்ப முடியாது

பெரும் மழையில் ஒரு சவாலும் வந்திருக்கின்றது அதாவது ஒரு தீவு ஊரின் விமான நிலையத்தில் ஏகபட்ட பயணிகள் இருக்கும் பொழுது ஒரு கப்பல் சூறாவளியில் சிக்கி அலைமோதி பாலத்தை இடித்துவிட்டது

ராமேஸ்வரம் பாலம் இடிந்தால் என்னாகும் அப்படி இருக்கின்றது நிலை

இப்பொழுது அந்த விமான நிலையத்திலிருக்கும் மக்களை மீட்க மாபெரும் நடவடிக்கை எடுத்துகொண்டிருக்கின்றது ஜப்பான்