ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்
மிஸ்டர் சைமன், நீர் இல்லாத பொய்களை அவிழ்த்துவிட உமக்கு பதில் சொல்லித்தான், உமது பொய்முகத்தை கிழிக்கத்தான் எழுதினோம்
அப்பொழுது நீர் கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொட்டிருந்தீர்
உமது பொய்களை கிழிக்கும் பொழுது இந்த திமுகவினர் எல்லாம் ஓடிவந்து ஆம், அப்படித்தான், நன்றி நன்றி என சொல்லித்தான் சேர்ந்தார்கள்
இப்பொழுது நீர் ஓய்ந்துவிட்டீர், இருக்கின்றீரா இல்லையா என்பதே தெரியவில்லை, உலகின் அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு ஓடிவிட்டீர்
இதுகளோ இப்பொழுது எம்மை சுற்றி கொண்டு விடமறுக்கின்றது, சில விஷயங்களை சொன்னால் உம்மை திட்டுவது போலவே எம்மையும் திட்டுகின்றன
எல்லாவற்றிற்கும் மூலகாரணம் நீரும், நீர் அள்ளிவிட்ட பொய்களும்
ஏ அங்கிள் சைமா, உமது ஆமைகறி பாவத்திற்கு கூட மன்னிப்பு உண்டு, ஆனால் இந்த திமுக கும்பலிடம் எம்மை சிக்க வைத்த பாவத்திற்கு மட்டும் உமக்கு மன்னிப்பே கிடைக்காது
கிடைக்கவே கிடைக்காது, இதோ பிடி சாபம்
உம் தும்பிகளிடமே அடிபட்டு சாவீராக..
ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார், ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு தமிழகத்தில் தொடங்க அழைப்பு : செய்தி
ஜப்பானில் கல்யாண ராமன் என்ற டைட்டில் நினைவுக்கு வர கூடாது
இப்பொழுது அமைச்சருக்கு சிக்கல் என்னவென்றால், ரஜினிக்கு ஜப்பானில் ஏகபட்ட ரசிகர்கள் உண்டு
யாராவது அமைச்சரிடம் ரஜினி எப்படி இருக்கின்றார் என கேட்டுவிட்டால் அவ்வளவுதான், பொங்கி தீர்த்துவிடுவார் அமைச்சர்
“அவரால் முதலமைச்சர் ஆக முடியாது, அவர் சும்மா, எல்லாம் அம்மா” என ஜெயக்குமார் ஜப்பானில் பொங்கினால் பார்க்க நன்றாய் இராது