ஜப்பான் , தென்கொரியா பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப்
ஜப்பான் , தென்கொரியா நாடுகளுக்கான தன் பயணத்தை தொடங்கிவிட்டார் டிரம்ப்
சும்மா செல்லவில்லை, ஒரு வித்தியாசமான சிக்னலை உலகிற்கு காட்டிவிடுத்தான் கிளம்பியிருக்கின்றார்
அதாவது இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா தொடக்கத்தில் ஒதுங்கித்தான் இருந்தது, ஜப்பான் அதன் மீது குண்டு வீசி பல அமெரிக்கர்களை கொன்றபின்புதான் அது களமிறங்கிற்று
முதன் முதலில் தன் சொந்த மக்களை, சொந்த மண்ணில் அந்நியரால் அமெரிக்கர் இழந்த முதல் சம்பவம் அதுதான், அந்த கோபம் பின் ஜப்பானில் அணுகுண்டாய் வெடித்தது
ஜப்பானுக்கு செல்லுமுன் டிரம்ப் அந்த பியர்ல் ஹார்பர் சென்று அஞசலி செலுத்திவிட்டுத்தான் ஜப்பான் சென்றிருக்கின்றார், அதாவது எம் மக்களை காக்கத்தான் ஜப்பான் மீது அணுகுண்டு வீசினோம், இனி யாரும் வாலாட்டினால் உருதெரியாமல் அழிப்போம் எனும் அறிவிப்பு அது
அது வடகொரியாவிற்கான அறிவிப்பு என்பது சொல்லியா தெரியவேண்டும்
ஜப்பானுக்கு சென்றிருக்கும் டிரம்ப், அடுத்து தென்கொரியா செல்வாராம். இது அப்பகுதியில் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது
வடகொரிய அதிபரின் பேட்டை அந்த ஏரியாக்கள், சும்மாவே அமெரிக்காவினை தொலைப்பேன் என வெள்ளை தக்காளி சவால்விடும் வேளையில் டிரம்பின் பயணம் கடும் பாதுகாப்பாம அமைந்திருக்கின்றது
கென்னடி, ரீகன் சம்பவங்களுக்கு பின் தங்கள் அதிபரை காப்பதில் தனிபட்ட பாதுகாப்புகளை அதிகபடுத்தியிருக்கின்றது அமெரிக்கா
கண்ணுக்கு தெரியும் கப்பல்கள், விமானங்கள் உளவுதுறை என ஒருபுறம் இருக்க கண்ணுக்கு தெரியா நீர்மூழ்கி, செயற்கைகோள்கள் என கடும் பாதுகாப்பில் பயணிக்கின்றார் டிரம்ப்