ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது
ஜல்லிகட்டுக்கு தமிழகமே பொங்கி மீட்டு வந்தது, ஆனால் அதில் நடக்கும் உயிர்பலி பற்றி எந்த தமிழனும் கவலைபட்டதாக தெரியவில்லை
நேற்று ஒருவர் களத்தில் செத்திருக்கின்றார், இனி அவர் குடும்பம் என்னாகும்? யார் அக்குடும்பத்திற்கு பொறுப்பு?, அவர்கள்தான் இனி அழுது அலறி காலம் முழுக்க வலியோடு வாழவேண்டும்
இதெல்லாம் கேட்டால் தமிழின துரோகி ஆகிவிடுவோம்
ஜல்லிகட்டிற்கு மாட்டு கொம்பை பிடித்து துன்புறுத்த கூடாது எனும் விதிகளை எல்லாம் வகுத்து நடத்துகின்றார்களாம். அப்படியே வீரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு முறைகளை, சில முறைகளை , சிறப்பு பாதுகாப்புகளை நடைமுறைபடுத்த சொல்லி போட்டியினை நடத்தலாம்
ஆபத்தான விளையாட்டுகளை தற்காப்பு விஷயங்களை அணிந்து விளையாடுவதால் அது வீரத்தை காட்டாத விளையாட்டு ஆகிவிடாது