ஜல்லிக்கட்டும் மல்யுத்தமும்..

மனிதனை மனிதன் போட்டு அடிக்கும் மல்யுத்தம் நடக்கலாமாம், அதில் ஒருவன் பதக்கம் வென்றால் கோடி கணக்கில் கொடுத்து உற்சாகபடுத்துவார்களாம்.

அதில் மனிதன் படும் வதை எல்லாம் கண்ணுக்கே தெரியாது, கொஞ்சமா வதைக்கின்றார்கள்?

குத்துசண்டை எனும் கொடூர விளையாட்டில், சக மனிதனை ரத்தம் வரும் அளவிற்கு போட்டு அடிக்கலமாம்.

அதில் பதக்கம் இல்லை என்றால், ஏன் நீ அவனை சரியாக மூக்கிலே குத்தவில்லை என வருந்துவார்களாம்

ஆனால் ஒரு மாட்டினை மனிதன் அடக்கி விளையாடினால் அது மிருகவதையாம், தடை செய்வார்களாம்

மனிதனை மனிதன் போட்டு அடிக்கலாம், மிதிக்கலாம், குத்தலாம், சாத்தலாம் அதெல்லாம் கலை, விளையாட்டு இன்ன பிற‌

ஆனால் மாட்டினை தொட்டால் விடமாட்டார்கள்

மனிதன் மனிதனை போட்டு வதைத்தால் கைதட்டுவார்களாம்,

ஆனால் மாட்டோடு மனிதன் விளையாடினால் கண்ணீர் சிந்தி கோர்ட்டுக்கு செல்வார்களாம்.

இந்த பேட்டா இம்சைகளை, அதன் உறுப்பினர் அழிச்சாட்டியங்களை எல்லாம் இந்த கொடூர குத்துசண்டைகளை பார்க்க வைத்து செருப்பால் அடிக்க வேண்டும்.