ஜாலியன் வாலா பாக்.

Image may contain: one or more people, people standing and outdoor

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம்.

உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று.

கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் வடிவம் அது. அரசுக்கு எதிரானவன் என்ற சந்தேகம் மட்டும்போதும், காவல்துறை அவன் தலைவிதியினை இஷ்டபடி எழுதலாம், நீதிமன்றம் எல்லாம் தலையிடமுடியாது, ஜாமீன், வழக்கு எல்லாம் கனவிலும் நடக்காது.
வெள்ளையன் அப்படித்தான் எல்லாம் சட்டமியற்றிவிட்டுத்தான் செய்வான், அவன் வழக்கம் அது.

புல்லினை புடுங்கவேண்மென்றாலும் சட்டம் என்ன சொல்கிறது என பார்த்துவிட்டுதான் செய்வான்.அப்படி ஒரு சட்டம் இல்லாவிட்டால் இயற்றிகொள்வான்.

இந்நாளில் இஸ்ரேலியசட்டம், ஜெயவர்த்தனேவின் பாதுகாப்பு சட்டம், இந்தியாவின் பொடோ சட்டம் என எல்லாவற்றிற்கும் இந்த ரவுலட்சட்டம்தான் தாய் அல்லது முப்பாட்டி.

நாடு முழுக்க அச்சட்டத்தினை எதிர்ப்புகள் வெடித்தபொழுது அது பஞ்சாபிலும் உணர்ச்சி கணல் ஊட்டிற்று, இன்றுபோல் அன்றும் பஞ்சாபியருக்கு அறுவடை திருவிழா, அந்த பைசாகி எனப்படும் பண்டிகை அன்றுதான் மக்கள் அந்த அமிர்தசரஸ் பூங்காவில் மாலையில் கூடினர், விழாக்காலம் என்பதால் பெருங்கூட்டம், கிட்டதட்ட 10000 பேர் கூடியிருக்கலாம் என்பது கணக்கு.

அந்த பூங்காவின் பெயர்தான் ஜாலியன் வாலா பாக். நாலுபக்கம் மதில் கொண்ட பூங்கா அது, நுழைய ஒரு குறுகிய வாயில்தான் உண்டு. பழம் அரசர் காலத்தின் தொடர்ச்சியான வரலாற்று திடல்
அன்றைய கமிஷனர் பெயர் ஜெனரல் ரெஜினால்ட் டயர், ஒரு காவல் படையோடே வந்தான் அதில் 50 இந்தியரும் உண்டு,

வந்தவன் எச்சரிக்கை கூட கொடுக்காமல் சுட சொன்னான், மக்கள் செத்துமடிந்தனர், வாசலை அடைத்துகொண்டு சுட்டதால் சுவர் ஏறி குதித்த நெரிசல், கிணற்றில் தவறிவிழுந்து, மிதிபட்டு என கிட்டதட்ட 1500க்கு மேற்பட்டவர் செத்தனர், நிதானமாக கடமையாற்றிய டயர் தோட்டாவும், பீரங்கிகுண்டுகளும் தீருமட்டும் சுட்டான்,

அவை தீர்ந்ததால் மீதிமக்கள் கொல்லபடவில்லை எனினும் மாலை ஆனதால் ஊரடங்கு உத்தரவு என சொல்லி திறந்தவெளி சிறைவத்து காலையில்தான் வெளியில் விட்டான் டயர். அவன் கடமை உணர்ச்சி அப்படி.

அதாவது சட்டபடி சுடமட்டும் செய்தானாம், கத்தியால் குத்தவில்லையாம், சட்டபடி ஊரடங்கு உத்தரவில் அவர்களை பிணகுவியல்நடுவே அழவும் வைத்தானாம், சுற்றி சொந்தம் இறந்துகிடக்க,நடுவிலிருந்தவருக்கு எப்படி இருந்திருக்கும்?? பெண்களும் குழந்தைகளும் கூட ஏராளம்.

செத்தது 379 பேர் என சொன்னது பிரிட்டன் அரசு, அரசுகள் என்று உண்மையினை சொல்லும்? கிட்டதட்ட 2000 பேர் இறந்திருக்கலாம் என்பது உண்மை. நடந்த நாள் ஏப்ரல் 13, 1919.

இந்திய சுதந்திரவரலாற்றில் பெரும் திருப்பத்தினை ஏற்படுத்தியது இந்த படுகொலை, வங்கநவாப்,திப்பு,கட்டபொம்மன் என பலரின் படைகளின் தொடர்ச்சியாக இந்த மக்களும் மொத்தமாக உயிர்கொடுத்து சுதந்திர தீ எரித்தனர்.

நாடு கொந்தளிக்க வெள்ளை அரசாங்கம் அவனை பணிமாற்றி லண்டனுக்கு அனுப்பியது, அங்கு அவர் பெரும் ஹீரோ என கொண்டாடபட்டார். வெள்ளையர்கள் அவனை உள்ளூர ரசித்தான். லண்டன்வாசிகள் இப்படித்தான் சுதந்திரம் கேட்பவர்களை கொல்லவேண்டும், நாம் ஆள, கொல்ல பிறந்தவர்கள் என அறுதியிட்டு சொன்னது. அவனை கொண்டாடியது.

எந்த பெரும் ஆணவ கொலைகாரனை பழிவாங்க காலம் ஒருவனை உருவாக்கும் அல்லவா? இறைவனின் விதி அது. அப்படி உருவானான் பஞ்சாபின் உதம்சிங்.

தொடர்ந்த தேடுதலில் 21 ஆண்டுகளுக்கு பின் உதம்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது, லண்டனின் பெரும் ஹீரோவான கொடியவன் டயர் கலந்து கொண்ட கூட்டத்தில் உத்தம்சிங்கும் கலந்தான், டயர் கூட்டத்தில் உரையாற்றினான் இப்படி,

“ஆப்ரிக்க பிரிட்டன் காலணிநாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பினை அடக்க என்னைபோல ஆட்கள் அவசியம், அன்று அமிர்தசரஸில் இன்னும் ஆயுதம் இருந்திருந்தால் ஒருவரையும் விட்டிருக்கமாட்டேன், என் கடமையினை முழுமையாக செய்யாதற்கு வருந்துகிறேன்(எப்படி?), இன்னுமோர் வாய்ப்பு ஆப்ரிக்காவில் அரசு தருமா?” என இன்னும் வீரமுழக்கம் எல்லாம் இட்டு இறங்கினான் டயர்.

கொஞ்சம் கூட அத்தனை பேரினை, அப்பாவிகளை கொன்ற வருத்தம் கொஞ்சம் கூட அவனிடம் இல்லை, அத்தனை அகம்பாவம்.

அவன் முன்னால் சென்றான் உதம் சிங், தன் கையில் உள்ள புத்தகத்தை பிரித்தான், உள்ளே இருந்து துப்பாக்கி எடுத்தான்,”இன்னொரு வாய்ப்பு தரமாட்டோம்” என சொல்லி சுட்டான், இன்னும் இருவருக்கும் சூடு விழுந்தது, இறந்து வீழ்ந்தான் கொடியவன் டயர்.

எங்கும் ஓடாமல் அமைதியாக நின்றான் உதம்சிங், மெதுவாக புன்னகைத்து சொன்னான், ” உன் பெயர் என்ன என்றதற்கு? ராம் முகம்மது சிங் ஆசாத், (எப்படி மத சமத்துவம் சொல்லியிருக்கின்றான்) நான் ஒரு இந்தியன், இந்த டயரால் கொல்லபட்ட மக்களின் ஆன்மா, நான் என் கடமையினை முடித்துவிட்டேன், இனி என்ன மரணம்தானே, கொடுங்கள்”

ஒரு புத்தகத்தின் உள்பக்கத்தை வெட்டி துப்பாக்கி மறைத்து, கைகளில் கொண்டு, பாதுகாப்பான அந்த மண்டபத்தில் நுழைந்தான் உதம்சிங், (பின்னாளில் ராஜிவ் கொலையாளி சிவராசனும் திருப்பெரும்புதூரில் இப்படியான துப்பாக்கிபுத்தகத்தோடுதான் நின்றான்,எப்படிபட்ட காப்பியக்காரர்கள் புலிகள்)

தன் தலைநகரிலே புகழ்மிக்க(?) டயரினை ஒரு இந்தியன் கொன்றதை வெள்ளையனால் தாங்கமுடியவில்லை. எப்படியாவது உதம்சிங் ஒரு மனநிலை சரியில்லாதவன் என நிரூபிக்க படாதபாடுபட்டது வெள்ளையன் அரசு, ஆனால் முடியவில்லை. ஒரு இந்தியன் வெள்ளை ஜெனரலை சுட்டது அவனுக்கு அவ்வளவு பெரும் அவமானம்.

பின்னாளில் கென்னடி கொலையில் கூட, விசாரித்து இந்த சின்ன கொசுவா அமெரிக்க அதிபரை கொன்றது? வெளியில் சொன்னால் அவமானம் அல்லவா? என சொல்லி அந்த கொலைகாரன் ஆஸ்வால்ட்டினை மெண்டல் என தீர்பளித்தது நினைவிருக்கலாம்.
இன்றுவரை கென்னடி கொலை தீர்ப்பு அப்படியானது.

எந்த பைத்தியம் அப்படி மிக சரியாக சுடும் என்பதும் தெரியவில்லை, வெள்ளையன் இறுமாப்பு அப்படி. ஒரு பைத்தியம் இப்படி வந்து கொல்லுமளவிற்கா உங்கள் பாதுகாப்பு இருக்கின்றது? என ஒருநாடும் பதில்கேட்கவுமில்லை என்பது இன்னொரு விஷயம்.
மொத்தத்தில் பெரிய மனிதன் அடிபட்டால் வெளியில் சொல்லமாட்டான் என்ற பழமொழியின் வடிவம் இது,

உதம்சிங்கினை அப்படி பைத்தியமாக்க முயன்ற வெள்ளையன் முயற்சி படுதோல்வி,பைத்தியம் என உதம்சிங் வழக்கறிஞர் நிரூபித்துவிட்டால் உதம்சிங் வழக்கிலிருந்து தப்பும் வாய்ப்பும் இருந்தது, இந்திய வழக்கறிஞர்கள் அவரிடம் சொல்லியும் பார்த்தனர், ஆனால் உதம்சிங்கிற்கும் அடிபணிந்து வாழ விருப்பமில்லை. சிங்கமாகவே இறந்தார்.

ஜாலியன் வாலாபக் படுகொலைக்கு அழுத காந்தி, டயரின் கொலைக்கும் அழுதார், அவர் அப்படித்தான், இது வன்முறை கலாச்சாரம் என்றார்.யாரும் உதம்சிங்கினை பற்றி ஒன்றும் சொல்லவில்லை,

ஒரே ஒரு குரல் மிக தைரியமாக உதம்சிங் செயலினை வரவேற்றது, அது நேதாஜியின் குரல். நேரு உதம்சிங்கினை புகழ்ந்தபொழுது இந்தியா சுதந்திரம்பெற்று 15 வருடம்தான் ஆகி இருந்தது.

1940ல் உதம்சிங் தூக்கிலிடபட்டு லண்டனில் புதைக்கபட்டார், பின்னாளில் இந்திராவின் இந்திய கோரிக்கைபடி அவரது எலும்புகள் இந்தியாவிற்கு அனுப்பபட்டு, நினைவுசின்னம் எழுப்பபட்டது.

இந்திய சுதந்திர பொன்விழாவினையொட்டி இந்தியா வந்த அரசி எலிசபெத் கணவன் எடின்பரோவுடன் அங்கு சென்று அஞ்சலி செலுத்தினார், அந்த கல்வெடினை பார்த்து, 379பேர் இறந்திருக்கமாட்டார்கள், எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாக சொல்லியிருக்கலாம் என எடின்பரோ சொன்னது சர்ச்சையானது, 2000 பேர் செத்ததை 379 என மறைத்ததே கொடுமை, இதில் இவர் வேறு.

லண்டன் பெருமிதம் அப்படியானது, இவர்களுக்கெல்லாம் ஹிட்லரும், சதாம் உசேனும், வடகொரிய அதிபரும், புட்டீனும்தான் சரி.

ஜாலியன் பூங்கா போல பல‌ தியாகங்கள் நிறைந்தது இந்திய வரலாறு, இப்படுகொலை நிகழ்ந்தாவது அடிமை இந்தியா. இன்று என்ன நடக்கின்றது?

மணலை கடத்தாதே என்றாலும் காவல்துறை அடி, மது வேண்டாம் என்றாலும் சாவு, அணுவுலை வேண்டாம் என்றாலும் அடி. சுதந்திர இந்தியாதான், ஆனாலும் ஜாலியன் வாலாபாக் மறைமுகமாக தொடரத்தான் செய்கிறது.

நேற்று கூட திருப்பூரில் செய்தார்கள்

ஜாலியன் வாலாபாக் ஒரு திட்டமிட்ட கொடூரம் என்றாலும் அவர்களின் சாவு இந்தியாவில் சுதந்திர தீயினை மூட்டியது, வெள்ளை அரசாங்கமே ஆடியது, ஆனானபட்ட சர்ச்சிலே முகத்தினை மறைக்க வைத்த சம்பவம் அது.

அக்காலத்திலிருந்தே அடிமேல் அடிவாங்கும் ஒரு இனம் என்றால் அது சீக்கிய இனம். கிட்டதட்ட 1500 வருடமாக அது வாங்கும் அடி கொஞ்சமல்ல, ஒரே காரணம் அதன் வளம்.

மதம்தான் சிக்கல் என்றால் நாங்கள் புதிதாக மதமே தொடங்குகின்றோம் எங்களை வாழவிடுங்கள் என ஒதுங்கிபார்த்த இனம் அது, அப்படியும் விடவில்லை உலகம்.

இதோ இன்று அவர்களின் தாயகம் பிளக்கபட்டு ஒரு பங்கு பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது, இன்னொரு பங்கு இரண்டாக பிளக்கபட்டு ஹரியானா பஞ்சாப் என துண்டாடபட்டிருக்கின்றது, இடையில் தீவிரவாதம் + இந்திரா கொலை + கலவரகொலைகள் வேறு.

இவ்வளவு பாதிக்கபட்டும் இந்திய ராணுவத்தில் அவர்கள்தான் 60% , அவர்கள் பாதிப்பில் 100ல் 2 பங்கு கூட தமிழினம் பாதிக்கபட்டிருக்குமா என்றால் நிச்சம் இல்லை. ஆனால் அவர்கள் யதார்தத்தினை உணர்ந்துகொண்டார்கள், எது சாத்தியமோ அதனை புரிந்துகொண்டார்கள், இந்திய தேசிய தூணாக தாங்கி நிற்கின்றார்கள்.

அந்த ஒற்றுமையில்தான் ஒரு சிங் பஞ்சப் முதல்வராக அல்ல இந்திய பிரதமராக இருமுறை வரமுடிந்தது. பஞ்சாபியரிடமிருந்து ஒவ்வொரு இந்தியனும் கற்றுகொள்ளவேண்டியது ஏராளம் உண்டு.
பரோட்டாவும், சப்பாத்திக்கும் கோதுமையும், பாசுமதி அரிசியும் வழங்கும் அவர்களுக்கு இன்று வைசாகி எனும் அறுவடை நாள்

அந்த வாழ்த்துக்களை நன்றியோடு சொல்லலாம், அதே நேரம் அவர்கள் பட்ட ரத்த வரலாற்றிற்று உச்சமான ஜாலியன் வாலாபாக்கின் குருதி நொடிகளையும் நினைவில் கொண்டு அஞ்சலி செலுத்ததலாம்.

நிச்சயம் உதம்சிங்கின் போராட்டமும் அவரின் வீர தியாகமும் மறக்கமுடியாதது.

அமிர்தசரஸ் என்றால் பொற்கோயில் மட்டுமல்ல, அந்த ஜாலியன் பூங்காவும் மறக்கமுடியாதது, இரண்டும் இரத்தத்தால் ஒரு காலத்தில் கழுவபட்டதுதான் கால‌ சோகம்.

இப்படி ஏராளமான சோகங்களை, தியாகங்களை கடந்துதான், சோதனைகளை வென்றுதான் இத்தேசம் உயர்ந்துகொண்டிருக்கின்றது

அந்த தியாகமிக்க பஞ்சாபிய சகோதரர்கள் அனுபவித்த கொடுமையில் 1000ல் ஒரு பங்கு கூட தமிழர்கள் அனுபவித்திருக்க மாட்டோம், ஆனாலும் தமிழர்களை இந்தியா அழிக்கின்றது என சொல்லிகொண்டே இருப்பார்கள், அரைப்பைத்தியங்கள்

அந்த ஜாலியன் வாலாபாக் பூங்கா இன்றும் மிக அமைதியாக தியாகத்தின் அடையாளமாக, பிரிட்டன் அடக்குமுறையின் சாட்சியாக, இந்திய விடுதலையில் புது திருப்பம் கொடுத்த வடுவாக பல விஷயங்களை சொல்லிகொண்டே இருக்கின்றது

இந்திய விடுதலை போராட்டத்தில் 98 ஆண்டுகளுக்கு முன்னால் பெரும் எழுச்சியூட்டிய தியாக சம்பவம் அது..

உலகமே அரண்டு நின்ற , இந்தியாவில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய இச்சம்பவத்தை பற்றி, பகத்சிங் முதல் பலரும் களத்துக்கு வந்த இச்சம்பவம் பற்றி, நேருவும் காந்தியும் களத்துக்கு ஓடிவந்த இச்சம்பவம் பற்றி தேசமே அதிர்ந்து நிற்க, ஒரு கோஷ்டி கள்ள மவுனம் காத்தது

ஒரு வார்த்தை அவர்கள் வெள்ளையனை கண்டிக்கவே இல்லை, மாறாக சாமரம் வீசிகொண்டிருந்தனர்

அவர்கள் பெயர் பிராமண எதிர்ப்பு நீதிகட்சி, இந்த திக , திமுகவின் முன்னோடி கட்சி. அதனால்தான் அவர்கள் வழிவந்த ராம்சாமி முதல் திமுக வரை ஒரு காலமும் நாட்டுபற்றோடு இருப்பதில்லை..

101 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் பிரிட்டன் அரச குடும்பமும் பிரிட்டன் பாராளுமன்றமும் இன்னும் இச்சம்பவம் பற்றி மன்னிப்போ எதுவுமோ கேட்கவில்லை, கேட்கவும் மாட்டார்கள், எல்லாம் சட்டம் மூலம் செய்தோம் எனும் ஒருவித திமிரிலே இருப்பார்கள்

இந்தியர்கள் சாகபிறந்தவர்கள் எனும் அலட்சியம் அன்றி வேறல்ல‌ , சென்ற இடமெல்லாம் அங்கிருந்த பூர்வகுடிகளை இப்படி கொன்றுத்தான் ஆண்டார்கள்

இங்கே இந்தியர்கள், அமெரிக்காவில் செவ்விந்தியர்கள்.

இன்று 101 வருடம் கழித்து எந்த லண்டனில் இருந்து ரவுலட் சட்டம் இயற்றி இந்தியரை கொல்ல சொன்னார்களோ, அட கொன்றபின்பும் அதே தவறே இல்லை “ஆட்சி” என கொக்கரித்தார்களோ, அதே லண்டன் இன்று கதறிகொண்டிருக்கின்றது

பத்தாயிரம் பிணங்களோடு கதறிகொண்டிருக்கின்றது லண்டன்

காலம் எல்லாவற்றுக்கும் ஒரு கணக்கு வைத்திருக்கின்றது, அது தன் கடமையினை மிக சரியாக செய்கின்றது.