ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை
ஜிஎஸ்டி அலப்பறைகள் இன்னும் ஓயவில்லை, என்னவோ அதற்கு முன்பு வரியே இல்லாதது போலவும், புதிதாக வரி வந்தது போலவும் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
உணவங்களில் முன்பு சேவை வரி, அந்த வரி இந்தவரி என நிறைய இருக்கும், எல்லா பில்களிலும் இருக்கும் அதனை எல்லாம் எவனும் படமெடுத்து போட்டு கொண்டிருக்கவில்லை.
உப்பு முதல் தங்கம் வரை எந்நாளும் வரி இருந்தது, வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் வரி உண்டு.
வரியே இல்லாத தேசமாக இது என்றிருந்தது? மன்னர் காலம் முதல் வெள்ளையர் காலம், நமது மக்களாட்சி காலம் என எல்லா காலத்திலும் இருந்தது, வரியின்றி அரசு சாத்தியமில்லை
அதனை சீர்படுத்தி மொத்தமாக ஒரே வரி என சொன்னால் உடனே பொங்குகின்றார்கள்
தனி தனியாக பல வரிகள் கட்டுவார்களாம், ஆனால் ஒரே வரியாக்கினால் பொங்குவார்களாம்
வித்தியாசமான மக்களாகத்தான் இருக்கின்றார்கள்.
இந்த மோடியாவது பொறுத்தமாக பேசி தொலைக்க வேண்டும்
அன்றே சாணக்கியன் அர்த்தசாஸ்திரத்தில் வரி பற்றி சொல்லியிருக்கின்றான், வள்ளுவன் குறளில் அரசு வருமானம் பற்றி சொல்லியிருக்கின்றான் என சொன்னால் கைதட்டி வரவேற்கலாம்
அவரோ பகவத் கீதை, உபன்யாசம் என எங்கோ எடுத்துகாட்டுகளை சொல்லி வாங்கிகட்டிகொண்டிருக்கின்றார்
பகவத் கீதைக்கும், வருமான வரிக்கும் என்ன தொடர்பு?
இந்த மனிதரிடம் உள்ள கெட்ட பழக்கம் இதுதான், சம்பந்தமில்லாமல் பேசிதொலைப்பார்
சாணக்கியன் சொல்லாததையா பகவத் கீதை சொல்லிற்று?
மோடி இம்சை ஒரு பக்கம் என்றால், இந்த சாப்பாட்டு கடைகளுக்கு செல்வோர் இம்சை இன்னொருபுறம்
எல்லா பயலும் ரெஸ்டாரண்ட் பில் பாரீர் என்றுதான் படத்தை போட்டு இம்சை செய்கின்றான், எவனும் மற்ற கடைகளுக்கு செல்லவே மாட்டான் போலும்
ஜிஎஸ்டி பற்றி வேறு ஒன்றுமே அவனுக்கு சொல்ல தெரியவில்லை, அல்லது விசாரித்துபார்க்க தெரியவில்லை
ஆக அவ்வளவு பயலும் சாப்பாட்டுகடையில் மட்டும்தான் ஜிஎஸ்டியின் விளைவினை தேடிகொண்டிருக்கின்றான்,
உருப்படுமா தேசம்?