ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

ஜிஎஸ்டி வரியினை அதிகமாக விதித்து மக்களை கொடுமைபடுத்துகின்றனர் : சீமான்

அங்கிள் சைமன் உங்கள் அண்ணன் பிரபாகரன் ஈழ மக்களை வரியில் பிழிந்ததை விடவா இந்தியா வரி சுமத்திற்று?

ஓமந்தை சாவடியில் வன்னி மக்கள் செலுத்திய வரி என்ன?

வாகன வரி, நுழைவு வரி, பொருள் வரி, யுத்த வரி என எத்தனை வரிகளை புலிகள் சுமத்தினார்கள்?

சிங்களன் பகுதியில் 50 ரூபாய்க்கு கிடைத்தபொருள் புலிகள் பகுதியின் வரிகொடுமையால் 150 ரூபாய்க்கு விற்ற கொடுமை எல்லாம் நடந்த காலம் எல்லாம் இல்லையா?

விவசாயிக்கு உழவு வரி, நிலவரி, உற்பத்தி வரி என அவர்கள் பிடுங்கியது என்ன? யாரும் சிந்திக்காத புது புது வரிகளை போட்டு ஈழமக்களை அவர்கள் வதைத்தபொழுது எங்கே சென்றார் இவர்?

உங்கள் அண்ணன் 100% வரியிட்டால் அது சரி, இந்தியா 10% வரியிட்டால் அது மாபெரும் தவறா?

சிங்களனுக்கும் வரிகட்டி, புலிகளுக்கும் 50% வரிகட்டிய ஈழமக்களை என்றாவது நினைத்து நீர் பேசியதுண்டா? கேட்டால் உங்கள் அண்ணனின் ஆட்சி பொற்காலம் என்பீர்

100% வரிபிடுங்குவது பொற்காலமா?

ஐரோப்பிய ஈழமக்களை கடன் வாங்கி புலிகளுக்கு அனுப்ப சொன்னது போலவா இத்தேசம் செய்கின்றது?

அந்த பிரபாகரனின் தம்பி என சொல்லிகொண்டா ஜிஎஸ்டியினை குறை சொல்ல வருகின்றீர் அய்யா? யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியமா?

பிரபாகரனின் வரிகொடுமையில் கொஞ்சம் கூட இந்தியா விதிக்கவில்லை, இதுபற்றி பேச ஒரு தகுதி வேண்டும், அது உங்களிடம் இல்லை

அது இருக்கட்டும், அந்த யாசின் மாலிக்கோடு சேர்ந்து, பஞ்சாப் பிந்த்ரன்வாலே கோஷ்டியோடு சேர்ந்து இன்னும் சில பிரிவினைவாதிகளோடு சேர்ந்து ஜிஎஸ்டி கண்டித்து ஒரு மாநாடு நடத்தினால் என்ன அங்கிள்?

புலிகள் கொடுமையிலே பெரும் கொடுமை அவர்கள் விதித்த வரிகொடுமை, அதனை பற்றி பேசமாட்டாராம்

இத்தேசம் செய்திருக்கும் சிறிய வரி சீர்திருத்தம் என்றால் பக்கம் பக்கமாக முழங்குவாராம்