ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள்

இந்தியா நேற்று ஏவிய ஜிசாட் 6 செயற்கைகோள் தனது கட்டுபாட்டை இழந்ததாக செய்திகள் வருகின்றன , இது சாதாரண செய்தி அல்ல‌

காரணம் ஜிசாட் செயற்கைகோள் ராணுவ தொடர்பினை வலுப்படுத்தும் வசதிக்காக ஏவபட்டது

இதுவரை இந்தியா செலுத்தியதில் செயற்கை கோளை சுமந்து செல்லும் ராக்கெட் பழுதாகுமே தவிர செயற்கைகோள் எல்லாம் பழுதானதாக தகவல் இல்லை

வானவெளி என்பது பிரமாண்டமானது , இந்த செயற்கை கோள் எல்லாம் பூமி மீது அதன் சுற்றுபாதையில் நிறுத்தபடும், அதாவது அதில் நிறுத்திவிட்டால் அது சுற்றிகொண்டே இருக்கும்

இப்படி எல்லா நாட்டு செயற்கை கோள்களும் சுற்றிகொண்டே இருக்கின்றன, செயல்படாதது, கைவிடபட்டது பழைய செயற்கைகோள்கள், ஆயுட்காலம் முடிந்தவை எல்லாம் குப்பை போல சுற்றி வருகின்றன‌

இதில் இப்பொழுது தொடர்பற்றுபோன இந்திய செயற்கைகோள் எது என தெரியாது, அது தெரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது

இது தொழில்நுட்ப கோளாறால் நடந்திருக்கலாம் என்றாலும் சில யூகங்கள் வலுக்கின்றன‌

முன்பு அமெரிக்க ரஷ்ய யுத்ததில் ரஷ்யாவினை உளவுபார்க்க 10க்கும் மேற்பட்ட‌ செயற்கை கோள்களை அமெரிக்கா நிறுத்த, அவற்றின் மேல் ஒரு கோளை நிறுத்த்தி அதிலிருந்து லேசர் கதிர்களை பாய்ச்சி அனைத்து செயற்கைகோளையும் செயலிழக்க வைத்தது ரஷ்யா

சில ஆண்டுகளுக்கு முன்பு கூட எங்கள் செயற்கை கோள் பாதையில் சில ஓட்டை செயற்கை கோள் குறுக்கே கிடக்கின்றது அதனை அகற்ற புல்டோசர் போல் ஒரு செயற்கை கோளை அனுப்புகின்றோம் என சொல்லி அனுப்பியது ரஷ்யா,

இது மற்ற நாடுகள் செயற்கை கோளை அழிக்கும் முயற்சி என குதித்தது அமெரிக்கா ஆனால் கண்டுகொள்ள யாருமில்லை

இதில் சீனாவினை உளவுபார்க்க அனுப்பிய செயற்கை கோளை ஏவுகனை வீசி தகர்த்து மிரட்டியது சீனா

இப்படியான கண்காணா விண்வெளியிலும் விளையாட்டுகள் உண்டு

காரணம் விண்வெளி ஆதிக்கமே இனி உலகநாடுகளின் வெற்றி தோல்வியினை நிர்மானிக்கும் விஷயம் என்பதால், விண்வெளியினை கட்டுபாட்டில் வைக்க பல முயற்சிகள் நடக்கின்றன‌

இந்நிலையில் சீன விண்கலம் செயலிழந்து பூமியில் விழப்போவதும், இந்திய ராணுவ சேட்டிலைட் தொடர்பை இழந்ததாக அறிவிக்கபட்டதும் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது

என்னவோ நடக்கின்றது என்பது மட்டும் உண்மை

என்ன நடந்தது என்பது பின்னொரு நாளில் வெளிவரும் சிலநேரம் வரவும் வராது.