ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்
இந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள்
அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல,
கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான்.
பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை
பிரிட்டிஷ் இந்திய தலைவர்களுள் படித்த இஸ்லாமியர் எனும் ஒற்றை தகுதி அவருக்கு பாகிஸ்தானின் தந்தை எனும் பட்டத்தை கொடுத்தாயிற்று
இன்னொரு அதிர்ஷ்சாலி தமிழக குல்லா ராமசந்திரன்,
பெரியார் கல்லெறிநடுவே இயக்கம் வளர்த்தார், அண்ணாவும் கலைஞரும் கால் தேய தேய நடந்து கட்சி வளர்த்தார்கள், அசால்ட்டாக வந்த ராமசந்திரன் எல்லாவற்றையும் அடித்து சென்றார்
திமுகவில் இருந்த மிகசிறந்த மக்கள் அபிமான நடிகர் எனும் பிம்பம் ராமசந்திரனுக்கு புரட்சி தலைவர் பட்டம் பெற காரணமாயிற்று
இதெல்லாம் விதி, அவர்கள் விதி அப்படி இருந்திருக்கின்றது,
இந்த இரு குல்லாக்காரர்களின் ராசியினை பார்த்தால் அவர்களின் ஜாதகத்தை உடனே பார்க்கவேண்டும் என தோன்றுகின்றது
ஒரு புல்லும் புடுங்காமல் நாடே கிடைக்கின்றது என்றால் அவர்கள் ராசி எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?
ஜின்னாவிற்கு பிரிட்டிசாரும், ராமசந்திரனுக்கு இந்திரா காந்தியும் அப்படி கிடைத்திருக்கின்றார்கள்
ஆனால் ஜின்னா இறுதியில் வருந்தினார், பாகிஸ்தான் உருவானது எவ்வளவு பெரும் ஆபத்து என அவருக்கு புரிந்தது,
“நான் மிகபெரும் தவறு செய்துவிட்டேன், தனிநாடு கேட்டது தவறு, என் இறுதிகாலத்தில் மும்பை மாளிகையில் வசிக்க ஆசைபடுகின்றேன்” என சொல்லியபடியே செத்தார் ஜின்னா
அதிமுக உருவானது எவ்வளவு பெரும் தவறு என நம் கண்முன்னே பார்த்துகொண்டே இருக்கின்றோம்…
எந்த நோக்கமும் இன்றி யாரோ தூண்டிவிடுகின்றார்கள் நாம் தலைவராவோம், மன்னராவோம் என ஒருவர் சுயபுத்தியின்றி கிளம்பினால், அவருக்கும் கூட்டம் கூடினால், அது வருங்காலத்தில் எவ்வளவு பெரும் சீரழிவினை கொண்டு வரும் என்பதற்கும்,
தொலைநோக்கு இல்லா அவசரகுடுக்கைகள் அரசியல் செய்தால் வருங்காலம் என்னாகும் என்பதற்கும்
இந்த ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்