ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான்
ஜி.வி பிரகாஷை வைத்து “கோபம்” எனும் படத்தினை இயக்குகின்றார் சீமான்
ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிட்டார் சீமான்,
படத்தின் பெயர் ஏன் “கோபம்” என்று சிலர் சீண்ட கேட்டால், இந்த அரசு மீது, சமுதாயத்தின் மீது இருக்கும் கோபம் என அன்னார் வழக்கம் போல சீறுகின்றார்
உண்மையில் சீமானுக்கு “கோபம்” தமிழக மக்கள் மீது, கரடியாக கத்தினாலும் கண்டுகொள்ளாத “கோபம்”, புலி கதை பேசி பெரும் பணம் சுருட்டும் திட்டம் தோல்வியுற்றதில் கோபம்
அதுதான் உண்மையான “கோபம்”.
ஆனாலும் ஜிவி பிரகாஷை நினைத்தால் பாவமாக இருக்கின்றது, சீமானின் கத்தல் வசனங்களை பேசி எப்படித்தான் நடிக்கபோகின்றாரோ?
சுக்கு கசாயமும், அதிமதுர மூலிகை சாறும் கையில் ஏந்தி திரியும் ஜிவி பிரகாஷை தமிழகம் விரைவில் பார்க்க போகின்றது
அது என்ன கதையோ தெரியாது, ஆனால் படம் வந்தால் பார்ப்பவர் எல்லோருக்கும் “கோபம்” வரும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்..