ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று
அந்த ஜீயர் சோடாபாட்டில் விவகாரம் என்னாயிற்று என தெரியவில்லை, அவர் வருத்தம் தெரிவித்தார் என்றார்கள் ஆனால் யாரிடம் தெரிவித்தார் என சொல்லவில்லை சோடா பாட்டிலிடம் தெரிவித்திருக்கலாம்
ஆனால் திமுகவினர் அட்டகாசமாக ஸ்கோர் செய்யும் இடம் இது, பரிதாபமாக விட்டுவிட்டார்கள்.
கலைஞர் நலமாக இருந்தால் எப்படி சொல்லியிருப்பார். “வன்முறை அவர்களுக்கு புதிதா? ஒரு காலத்தில் உடன்கட்டை என இளம்பெண்களை துடிக்க கொன்றவர்கள்தானே அவர்கள்?
அதனைபோல் எத்தனை பெரும் கொடுமைகளை எல்லாம் செய்தார்கள்? ,
அவ்வளவு ஏன்? பெரியார் மீது அவர்கள் எறியாதா கல்லா இல்லை செருப்பா?
அவர்கள் பாரம்பரியமும் கலாச்சாரமும் அப்படி, அதில் சோடா பாட்டில் எல்லாம் ஆச்சரியமல்ல”