ஜெகோவா விட்னஸ்
இந்திய தேசிய கொடியினை ஏற்றமாட்டேன் என சொன்ன அந்த இந்திய தமிழக ஆசிரியை “ஜெகோவா விட்னஸ்” எனும் சபையினை சார்ந்தவர் என்கின்றன சில செய்திகள், இந்த சபை கொஞ்சம் சுவாரஸ்யமானது
ஜெகோவா என்பவர் அல்லது யாவே என்பவர் யூத மூல கடவுள். ஆதாம் ஏவாளை படைத்தவர் அவர்தான் ஒரு ஆப்பிளை தின்றதற்காக அவர்களை ஓட அடித்தவரும் அவர்தான்
ஆதாமின் மகன் காயின் தன் தம்பியினை அடித்துகொல்லும்பொழுது தடுக்காமல் அவன் செத்தபின் வந்து “ஏன் கொன்றாய்” என கொதித்தவரும் அவர்தான்
ஒரு சொட்டு மழை இல்லா பாலை நிலமான இஸ்ரேலில் ஒரு ஆறும் மழையும் வராதபடி அல்லது வர செய்யாமல் தன் மக்களை பஞ்சத்திலே வைத்தவரும் அவர்தான்
நைல், யூப்ரடீஸ், டைக்ரீஸ் என வளமான பகுதிகளில் தன் மக்களுக்கு ஒரு அடி நிலம் கொடுக்காமல் வறண்ட பாலையிலை வைத்து பழிவாங்கியவர் அவர்தான்
அடுத்தவன் மனைவியினை விரும்புவனை மன்னிக்கமாட்டேன் என பத்துகட்டளையில் சொல்லிவிட்டு கடைசி வரை சுமார் 20 அடுத்தவன் மனைவியினை ஆட்டையினை போட்ட தாவீது என்பவனை தன் செல்லமாக வைத்திருந்தவர் அவர்தான்
கொஞ்சம் அறிவாளியான சாலமோன் இவர்மேல்சில சந்தேகம் கொண்டதற்காக அவன் வம்சத்திடம் இருந்து ஆட்சியினை பறித்தவரும் அவர்தான்
அவர்மேல் ஏகபட்ட சர்ச்சைகளும் சில கேள்விகளும் பைபிளில் உண்டு
அவர் பூமியினை படைத்து பூமிக்கும் வந்து மண்ணை எடுத்து “என் சாயலாக மனிதனை படைக்கின்றேன்”என்று ஆதாமை படைத்தாராம்
யாருமில்லா இடத்தில் யாரிடம் அவர் இதை சொன்னார் என்பதே தெரியவில்லை, அவர் தன் சாயலாக மனிதனை படைத்தார் எனும் பைபிள் கடவுள் உருவமற்றவர் என்பதையும் அடுத்து சொல்கின்றது
இப்படி குழப்பங்களின் நாயகனான அந்த ஜஹோவா என்பவர் மூலம் ஜெராஸ்டிரிய மதத்தில் இருந்து வருகின்றது, ஜெராஸ்டிரிய மதம் பண்டைய இந்துசாயல் கொண்டது, ஜெராஸ்டிரியர் எனும் அந்த மூல ஆசாமி இந்துக்கள் சொல்லும் ஜெராஸ்ட்ரிய மாமுனி என்பவராக இருக்கலாம் என்பது தியரி
அந்த தியரியில் சில சுவாரஸ்யங்களும் உண்டு
ஆம், இந்துக்களை போல யூதருக்கும் மும்மூர்த்திகள் மூவொரு கடவுள் உண்டு, மனு எனும் ஊழிகால கதை நோவாக உண்டு இன்னும் பல ஒற்றுமைகள் உண்டு
அந்த ஜெராஸ்ட்ரிய மதம் இடிகடவுள், மழைகடவுள் என பல கடவுள்களை சொல்லும் , அந்த இடி கடவுள்தான் ஜெஹோவா
இந்த ஜெஹோவாதான் அபிரம் என்பவனை பாக்தாக் பக்கம் இருந்து இன்றைய பாலஸ்தீனுக்கு அழைத்து சென்று அமரவைத்தார், அதிலிருந்து எரிய ஆரம்பித்த பாலஸ்தீனம் இன்னும் எரிகின்றது
இந்த ஜஹோவாவினைத்தான் இயேசுவும் வணங்கினார் எனும் வகையில், இயேசுவின் கடவுள் ஜெகோவா எனும் வகையில் “ஜெஹோவா விட்னஸ்” எனும் சபை உலகில் பிரபலம்
ஆனால் இந்த சபையினை பல நாடுகள் அனுமதிக்கின்றன , தீவிர கிறிஸ்தவ மதமாற்ற எதிர்ப்புடைய நாடுகளும் அனுமதிக்கின்றன என்பதுதான் விசித்திரம், அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை
இந்த சபையின் தோற்றமே குழப்பமானது, இது பழங்கால சபை அல்ல 18ம் நூற்றாண்டில் உருவானது
இந்த சபையின் தோற்றம் பற்றி அறிய சில வரலாறுகளை தெரிவது நல்லது
இரண்டாயிரம் வருடத்துக்கு முன் இயேசு கொல்லபட்டபின் யூதர்கள் ரோமருக்கு எதிராக பெரும் புரட்சி செய்து ஜெருசலேமை கைபற்றினார்கள் ஆனால் ரோமர்கள் அவர்கள் கோவிலை இடித்ததோடு உலகெல்லாம் யூதரை விரட்டினார்கள், அப்பொழுது இந்தியா வந்த யூதர்களும் உண்டு
இப்படி யூதர்கள் உலகெல்லாம் சிதறடிக்கபட்டாலும் மறுபடி ஜெருசலேமை கைபற்ற கங்கணம் கட்டி பரம்பரை பரம்பரையாக வன்மம் காத்தார்கள்
ஆனால் போப்பாண்டவர் எனும் ஐரோப்பிய ராஜாவினை எதிர்த்து அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஜெருசலேமும் போப் வசம் வந்தது, யூதர் எது கேட்டாலும் அடி செல்லும் இடமெல்லாம் அடி விழுந்தது
பின் இஸ்லாமும் வந்து சிலுவைபோர்களும் வந்து ஜெருசலேமுக்காக கிறிஸ்தவரும் இஸ்லாமியரும் மோதும் பொழுது யூதம் ஒதுங்கி இருந்துவேடிக்கை பார்த்தது
13ம் நூற்றாண்டில் ஜெருசலேம் ஆட்டோமன் துருக்கியரிடம் வந்தது போப் ஐரோப்பிய அரசராக இருந்தார்
யூத சூழ்ச்சி எப்பொழுதும் வலுவானது தந்திரமிக்கது, போப்பின் ஆதிக்கத்தை குறைக்க திருச்சபையினை உடைக்க வழிதேடினார்கள் அதில் ஜெர்மனியின் மார்ட்டின் லுத்தர் சிக்கினான்
இவ்வளவுக்கும் அவன் யூத துவேஷி ஹிட்லருக்கு முன்னோடி ஏகபட்ட யூதரை கொன்றவன், ஆனால் அவனைத்தான் ரகசிய வழியில் வளைத்து நீயல்லவா கிறிஸ்தவன் போப் ஒரு ஏமாற்றுபேர்வழி என தூண்டிவிட்டார்கள்
அவன் ஆள்திரட்டி திருசபையினை இரண்டாக உடைத்து புரட்டஸ்டேண்ட் என தனிகிறிஸ்தவம் கண்டான் போப் வலுஇழந்தார்
தொடர்ந்து புர்டஸ்டண் சபைகள் குட்டிபோட்டு வளர்ந்தன, அவை வளர் வளர போப் செல்வாக்கு குறைந்தது யூத இனம் சிரித்து கொண்டது, நெப்போலியன் போப்பின் செல்வாக்கை அடியோடு ஒழித்தான்
போப் ஓய்ந்தாலும் ஐரோப்பிய மன்னர்கள் யூத வெறுப்பு கிறிஸ்தவர்களாக இருந்தார்கள், இனி மன்னனர்களை ஒழிக்காமல் ஐரோப்பாவில் தங்கள் ஆதிக்கம் நிலைக்காது என உணர்ந்த யூத இனம் கம்யூனிஸ்டுகளை உருவாக்கிற்று கார்ல் மார்க்ஸ் ஒரு யூதன்
இப்படியூதர் மறைந்து விளையாட அமெரிக்கா என மன்னன் இல்லா ஜனநாயக நாடு கிடைத்தது அவர்களுக்கு அதிர்ஷ்டம்
கம்யூனிசம் உலகை புரட்டிபோட தொடங்கிய காலத்தில் அதாவது ஐரோப்பாவில் மன்னர் ஒழிந்து மக்களாட்சி பரவதொடங்கிய காலத்தில்தான் இஸ்ரேல் எனும் யூதநாடுபற்றி யூதர்கள் ஆலோசித்தார்கள்
இரண்டாயிரம் ஆண்டு திட்டத்தில் வெற்றிக்கு பக்கம் வந்தார்கள்
(இதுதான் சியோனிஸ தொடக்கம் இந்த தொடக்கம்தான் ஆட்டோமன் ராஜ்ஜியத்தை முறியத்து லேண்ட் பேங்க், கிபுட் இயக்கம் என பல வகையில் பாலஸ்தீனில் நுழைந்து அப்பக்கம் ஹிட்லர் வரை தூண்டிவிட்டு ஒரு பக்கம் அடிவாங்கி இன்னொரு பக்கம் அதைகாட்டி தேசம் அமைத்த சாதனையாக மாறிற்று)
இந்த 18ம் நூற்றாண்டில்தான் உலகெல்லாம் இருக்கும் கிறிஸ்தவர்களை குழப்பி அவர்கள் அந்நாட்டுக்கே துரோகிகளாக மாறி, அந்நாட்டு அரசுகளே கிறிஸ்தவர்களை அடித்து ஒழிக்க ஒரு இயக்கம் உருவானது
அதுதான் ஜெகோவா விட்னஸ்
இது என்ன செய்யும் என்றால் ஒரு கிறிஸ்தவ இயக்கமாக தன்னை வெளிகாட்டும், அக்மார்க் கிறிஸ்தவ இயக்கமாகவே வரும், அதன் தத்துவமும் போதனையும் கிறிஸ்துவத்தினை முதலில் சரியாக காட்டும்
பின் பைபிளின் குழப்பமான பக்கங்களை தனக்கு சாதகமாக்கி குழப்பும், மக்களை மிகவும் குழப்பும் தாங்களே சரி என ஒரு தீவிரவாத மனப்பான்மை உருவாக்கும், அந்த மனப்பான்மையினை இதர இனங்களுக்கு எதிராக திருப்பும்
ஒரு கட்டத்தில் சம்பந்தபட்ட நாடுகள் எல்லா கிறிஸ்தவ சபைகளையும் போட்டு மொத்தமாக சாத்தும் அல்லது கிறிஸ்தவர் பலவீனமாவதை கண்டு மகிழும்
உண்மையில் ஜகோவா விட்னஸ் கிறிஸ்தவர்களை குழப்பி மக்களை குழப்பி பெரும் சர்ச்சைகளை செய்யும் ஒரு அமைப்பு, அதன் இயக்கமும் சூட்சுமமும் மிக தந்திரமானவை சிக்கினால் மீளமுடியாதபடி வலுவானவை
ஆனால் மிகபெரிய பணக்கார சபை அது, பல்லாயிரம் டாலர்கள் அனுதினமும் சுழலும் சபை அது
இதன் உண்மையான நோக்கம் கிறிஸ்தவர்களை குழப்பி அடித்து பைபிளை திசைதிருப்பி யூதர்கள் மேல் ஒரு அனுதாபம் ஏற்பட செய்வது
யூதரின் ஒரே நோக்கம் ஜெருசலேமை பெற்றுகொள்ள கிறிஸ்தவர்களை குழப்புவது என்பது, அவர்களுக்கு இஸ்லாம் இன்னொரு எதிரி எனினும் கிறிஸ்தவமும் பெரும் எதிரி
அந்த எதிரிகளை பல வகையில் குழப்புவார்கள் அதில் ஒன்று இந்த சபை
இதன் மூலம் அறிந்த நாடுகள் இதை தங்கள் நாட்டின் கிறிஸ்தவ கும்பல்களை அடக்கி ஒடுக்க அனுமதிக்கும், கிறிஸ்தவர்களை குழப்பி அவர்கள் மொத்தமாக அடிபட்டு சாக இது வழிசெய்யும்
அப்படிபட்ட சபையில் இருக்கும் ஆசிரியைதான் இப்பொழுது இந்திய தேசியகொடியினை ஏற்றமாட்டேன் என அடம்பிடித்து சர்ச்சையில் சிக்கியிருக்கின்றார்
இதே சர்சையினை இச்சபை உலகின் பல இடங்களில் செய்து பல கிறிஸ்தவ சபைகளை அடிவாங்க வைத்து மூடவைத்த சாதனையினை செய்தது
அதாவது கூட்டத்தில் ஒருவன் கல்லெறிந்தால் கூட்டத்தையே வைத்து சாத்துவார்கள் அல்லவா, ஒருவன் எறிந்த கல்லுக்கு ஊரே அடிவாங்கும் அல்லவா? அந்த கல்தான் இந்த சபை
அதே சாதனையினை இந்தியாவிலும் தொடங்கியிருகின்றது, கிறிஸ்தவ கும்பல்களை எப்படி ஒடுக்கவேண்டும் என்பதை மிக அழகாக நுணுக்கமாக திட்டமிட்ட கோஷ்டிகளின் விருப்பம் இந்தியாவிலும் நிறைவேறுகின்றது
காலம் சரியாக கனிந்து கொண்டிருக்கின்றது, ஜெஹோவா விட்னஸ் இந்தியாவிற்கும் நல்ல காரியங்களை செய்ய தொடங்கிவிட்டது
கிறிஸ்தவ சபைகள் எல்லாமே முழு கிறிஸ்தவம் அல்ல, அங்கு சர்வதேச அரசியல் உண்டு, உளவு அமைப்பு உண்டு இன்னும் ஏகபட்ட ஆபத்தும் வெளிதெரியா பாதாளங்களும் உண்டு, அவற்றுக்கிடையேயும் ஆயிரம் சர்ச்சையும் சண்டையும் உண்டு
இதனால்தான் மதமாற்றமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தேசத்துக்கு ஆபத்து என பல நாடுகள் இச்சபைகளை அனுமதிப்பதே இல்லை, சீனா போன்றவை அதிகவனமாக இருக்க இந்த எச்சரிக்கைதான் காரணம்
துரதிருஷ்டவசமாக மதசார்பற்ற இந்தியாவில் அந்த விழிப்புணர்வு இல்லை என்பது பெரும் சோகம்