ஜெயமோகன் சர்ச்சை
ஏற்கனவே தன் கதைகளில் நாடார்களை மிக கேவலமாக சித்தரித்தார் என்ற சர்ச்சை ஜெயமோகன் மேல் உண்டு
மேலாண்மை பொன்னுச்சாமி அதை மிக பகிரங்கமாகவே சொல்லியிருந்தார்,சுஜாதா அதை பட்டும் படாமலும் சொன்னார்
இப்பொழுது நாடார் கடையில் வம்பிழுத்து சிக்கியிருன்றார் ஆசான்
ஆசானுக்கு அடி மிக நன்றாக விழுந்திருக்கலாம், மிக சாதுர்யமாக “இது திமுகவின் அடி அல்ல, அல்ல அவர்கள் இப்படி எல்லாம் அடிக்கமாட்டார்கள், நல்லவர்கள்
இது குடிகாரன் ஒருவனின் அடி..” என சொல்லி தப்புகின்றார்.
திமுகவினரிடமும் அடிவாங்க அவர் தயாராக இல்லை..
எனினும் நாடாருக்கு எதிரான மனநிலை கொண்டவர் என்ற பிம்பம் ஏற்கனவே இருப்பதால் விஷயம் வேறுமாதிரி திரும்புகின்றது
இனி ஜெயமோகன் வாக்கிங் எல்லாம் செல்லமாட்டார் என்பது மட்டும் நிஜம், கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்பதும் நிஜம்
அவர் பாஷையில் சொல்வதென்றால் அவர் தோசைமாவு வாங்க கிளம்பியது இப்படித்தான்..
“ஒரு கவிழ்ந்த முடிவுபகலின் (மாலை) உச்சியில், சிறு குடலின் உள்ளெழுச்சியில் பெருங்குடலின் ஓசை கலந்த பேரோளியில், நீர்மமும் திடமும் கலந்த ஓர் உணவு தேடலில் அறியா புரிதலில் , அங்காடிக்காரனுடன் மனஎழுச்சியுடனான சொரிதலில்…”
ஆக சுமார் 35 வருடங்களுக்கு முன்பே கடையில் தோசைமாவு புளித்திருந்தால், அதனால் பார்வதி புரத்தில் ஒரு சண்டை வந்திருந்தால் தமிழ் இலக்கிய உலகம் தப்பியிருக்கலாம்
