ஜெயலலிதா குறித்தான எய்ம்ஸ் அறிக்கை..
ஒரு வழியாக ஜெயலலிதா குறித்தான எய்ம்ஸ் அறிக்கையினை வெளியிட்டுவிட்டார்கள்
என்ன சொல்கின்றது அறிக்கை? அதே அப்பல்லோ, அதிமுகவினர், லண்டன் டாக்டர் சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் மாற்றி சொல்லியிருக்கின்றார்கள் வேறு ஒன்றுமில்லை
அதாவது சொல்லபட்ட காட்சிக்கு ஒவ்வொரு கவிஞனும் தன் மொழியில் கவிதை எழுதுவது போல எழுதியிருக்கின்றார்கள், காட்சி அதேதான்
இதில் பல விசித்திர காட்சிகளை நாம் காணமுடியும்
அதாவது ஜெயா மருத்துவமனையில் இருந்தபொழுது இந்நாட்டின் நிதி அமைச்சர், ஆளுநர், எதிர்கட்சி ராகுல் என பெரும் தலைகள் யாரும் ஜெயாவுடன் பேசவுமில்லை, அருகில் சென்று பார்க்கவுமில்லை
எய்ம்ஸ் டாக்டர்கள் சிலமுறை வந்து அவருக்கு கொடுக்கபடும் சிகிச்சை பற்றி ஆராய்ந்தார்களே தவிர, உருப்படியாக ஒன்றும் அன்று சொல்லவே இல்லை.
ஜெயா பற்றி மர்மத்தையே தொடர்ந்தனர், ஆனால் அதிமுகவினர் அழிச்சாட்டியம் தொடர்ந்தது.
அவர் அந்த மனுவில் கையெழுத்திட்டார், இட்லியினை இப்படி தூக்கினார், அந்த உத்தரவிட்டார் என ஏக இம்சைகள், அப்பல்லோவில் பிறந்த குழந்தைக்கு சசிகலா என பெயரிட்டார் என்ற செய்தி வராதது மட்டும்தான் பாக்கி
மற்றபடி இப்படித்தான் வந்தன, பெரும் தலைகளை பார்க்கமுடியாத ஜெயா சிறு வண்டுகளுடன் கலகலப்பாக விளையாடினார் எனும்பொழுதே மர்மம் வந்தது
எங்களிடம் பேசமுடியாத ஜெயலலிதா, இவர்களோடு பேசினாரா? என விஷ்யம் கேள்விபட்டு இந்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஓடி வந்திருந்தால் சிக்கல் இல்லை, ஆனால் வரவில்லை
எல்லாம் முடிந்து, ஜெயா புதைக்கபட்டபின்னும் எய்ம்ஸ் வாய்திறக்கவில்லை
ஒரு நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கபட்டபொழுதும் எய்ம்ஸ் சத்தமே இல்லை.
பன்னீர் முதல்வராக இருக்கும் வரை சசிகலா புஷ்பா தான் பொங்கிகொண்டிருந்தாரே ஒழிய, பி.எச் பாண்டியன் சத்தமே இல்லை
சசிகலா பதவிக்கு வர பன்னீரை பிடித்து தள்ளிய பின், மண்ணை துடைத்து எழுந்த பன்னீர் அதன்பின்னர் தான், அம்மா சாவில் மர்மம் என்றார், எந்த பன்னீர்? அனுதினமும் அப்பல்லோவின் வாசலில் இருந்த பன்னீர், அதாவது அன்று ஊமை பன்னீர்
இதனால் அதிர்ச்சியடைந்த சசி தரப்பு அவசரமாக லண்டன் டாக்டரை அழைத்து அப்பல்லோவில் பிரஸ்மீட் நடத்தியது, ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி இறந்தார் என எல்லோரும் சூடமேற்றி சத்தியம் அடித்தார்கள்
அப்பொழுதும் எய்ம்ஸ் குழு அமைதி காத்தது
பின் சசிகலா சிறைக்கும், பன்னீர் தெருவுக்கும் வந்து பழனிச்சாமி முதல்வராகும் வரை ஒன்றுமில்லை
ஆனால் பி.எச் பாண்டியன் குற்றவாளியினை நெருங்கிவிட்டேன் என அறிவிக்கின்றார், பன்னீர் உண்ணாவிரதம் என்கின்றார் இன்னும் ஒருபடி மேலே சென்று சிபிஐ விசாரணை வேண்டும் எனும் அளவிற்கு குரல்கள் எழும்பின
இதில் ஆளும்தரப்பு அலறிபோனது உண்மை, அப்படி நடந்தால் முதல் குற்றவாளி பன்னீர் என விஜயபாஸ்கர் தன்னையறிமால் உளறும்பொழுதே சிலருக்கு வியர்த்தது
இனி முந்திகொள்ளவேண்டும் என அடுத்தகாட்சிக்கு எய்ம்ஸை அழைத்திருக்கின்றார்கள், அவர்களும் வசனத்தை ஒப்புவித்தாகிவிட்டது.
இவ்வளவு நாளும் இல்லாத எய்ஸ்ம்ஸ் இப்பொழுது எப்படி ஓடிவந்தது?, பின்னணியில் பல பேரங்கள் நடந்திருக்கலாம்.
ஆக இவர்கள் மர்மம் இல்லை, மர்மம் இல்லை என்பதில்தான் ஏதோ மர்மம் இருப்பது எல்லோருக்கும் புரிகின்றது
நிச்சயம் ஒரு மர்மம் இருக்கின்றது, அது சம்பந்தபட்ட சிலருக்கு புரிகின்றது
இதில் களமிறங்கிய டெல்லி ஒரு பிரிவினை தூண்டிவிட்டு கேட்க சொல்லிவிட்டு, இன்னொரு பிரிவுடன் நான் உனக்கு உதவினால் எனக்கு என்ன கிடைக்கும்? என பேரத்தில் இறங்கியிருக்க சாத்தியம் உண்டு
இது அரசியல், கையில் அரிசந்திரன் சிக்கினால் கூட அவனை வைத்து அரசியல்தான் செய்யவேண்டும் என்பது சித்தாந்தம்,
நியாயம், தர்மம், இதெல்லாம் இரண்டாம் பட்சம். கையில் சிக்கியதை வைத்து மிரட்டவேண்டும், தன் வழியில் சிக்கல் வராமல் சரி செய்யவேண்டும்
இரு அணி குடுமியுமே டெல்லி கையில் அட்டகாசமாக சிக்கிவிட்டது, இனி இதனை வைத்து அதனையும், அதனை வைத்து இதனையும் சீண்டிகொண்டே இருந்து தங்கள் காரியங்களை சாதிப்பார்கள்
காரியம் என்றால்?
இனி தமிழக அரசு மத்திய அரசின் ரோபார்ட், சொன்னதை செய்யும், கடலில் குதி என்றாலும் குதிக்கும். பதஞ்சலி ராம்தேவ் ஜனாதிபதி என்றாலும் அதிமுக வாக்களிக்கும்
வருங்கால தேர்தலில் 40 தொகுதிகளையும் பாஜகவின் வெற்றிக்கு உழைக்கவும் அதிமுக தயார் ஆகலாம்
காலங்கள் இதனை உணர்த்தும்
மற்றபடி ஜெயா வாழ்ந்த வாழ்க்கையின் மர்மம் போலவே அவரின் சாவும் மர்மமாகவே தொடரும்
உண்மை உறங்கவில்லை, அது அதிகாரமுள்ளவர்கள் கையில் கத்தியாய் நிற்கின்றது, மிரட்டி பலரை பணிய வைக்கின்றது
ஒரு விஷயத்தில் எளிதில் உலகம் விளங்கிகொள்ளும்
அதாவது இந்த அப்பல்லோ, அதிமுக, எய்ம்ஸ் குழு எல்லாம் சொல்வது மகா உண்மையென்றால், ஒரு மர்மமும் இல்லையென்றால் ஏன் சிபிஐ விசாரணையினை எதிர்நோக்க கூடாது
அங்கு சென்று இப்படித்தான் சிகிச்சை பலனின்றி இறந்தார் என விளக்கினால்தான் என்ன?
ஏன் அஞ்சுகின்றார்கள்?
அஞ்சி அஞ்சித்தானே எல்லோரையும் அறிக்கை இட சொல்லி செய்தியாக பரப்புகின்றார்கள்? ஏன் அஞ்சவேண்டும்?
ஏதோ நடக்காவிட்டால் ஏன் இப்படி விசாரணைக்கு அஞ்சவேண்டும்?
இனி சிபிஐ விசாரணை நடக்குமா? அது சந்தேகத்திற்குரியது
காரணம் ஓங்கி குரல் எழுப்ப தலைவன் இல்லை. இது தனிகட்சியாக எழுப்பவேண்டிய குரல் அல்ல, கூட்டணியாக எழுப்பவேண்டிய குரல்
இதில்தான் கலைஞரை தேடவேண்டி இருக்கின்றது, நிச்சயம் திமுக பிராதன கட்சிதான் சந்தேகமில்லை, ஆனால் எல்லா குரலும் வேண்டும், அவர் இருந்திருந்தால் இன்று எல்லோரையும் சேர்த்து குரல் எழுப்ப வைத்திருப்பார்
திருமா, ராமதாஸ், ஈவிகேஸ், கமலஹாசன் என எல்லோரையும் இழுத்துபோட்டு “நீதி கேட்கும் கூட்டணி” என தொடங்கி, பெரும் அழிச்சாட்டியம் செய்திருப்பார்
அவர் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது
காமராஜரை எதிர்த்து ராஜாஜியினை அழைத்தது, பின்பு ஜெயாவினை எதிர்த்து மூப்பனாரை அழைத்தது என அவரின் மதிநுட்பம் அப்படியானது
தான் பெரும் தலைவன் என்றோ, எதற்கும் இறங்கமாட்டேன் என அவர் இருந்தது இல்லை, தரை மட்டும் இறங்கி வருவார். எந்த ஈகோவும் அவரிடம் இருந்ததில்லை
அவரிடம் இருந்த வித்தியாசமான நல்ல குணம் அது
அதாவது ஒரு கை ஓசை எழுப்பாது, கோடிகரங்கள் ஓசை எழுப்பினால் தமிழகம் தாங்காது என்பது அவர் எண்ணம்
முக ஸ்டாலினுக்கு இந்த நுட்பம் எல்லாம் சுட்டு போட்டாலும் வராது
சட்டசபை வாக்கெடுப்பு, சட்டை கிழிப்பு உண்ணாவிரதம் இன்னபிற சம்பவங்களில் எங்காவது ஒரு கூட்டணி தேடி பார்த்தீர்களா? யாரையாவது துணைக்கு அழைத்து கண்டீர்களா?
இது கலைஞரின் பாணி அல்ல, மாறாக ஜெயா பாணி
ஒரு கட்சியின் ஆரம்பநாட்களில் தெருதெருவாய் அலைந்து உழைத்து வளர்த்தவருக்கும், பின் தானாக வந்து அமர்ந்தவருக்கும் உள்ள வித்தியாசம் இது
கலைஞரிடம் எல்லோரையும் திரட்டும் துடிப்பு இருந்தது, ஜெயாவிடம் நான் யார் தெரியுமா? என்னை தேடி எல்லோரும் வரவேண்டும் எனும் இறுமாப்பு இருந்தது
அதே இறுமாப்பு ஸ்டாலினிடம் இல்லாதவரை நல்லது
கலைஞர் பாணியில் ஜம்போ கூட்டணி அமைத்து, அதிமுகவினை தனிமைபடுத்தி பெரும் கோரிக்கையில் சிபிஐ விசாரணை கொண்டுவந்தாலே அது சாத்தியம்
மாறாக டெல்லி கையில் குடுமி முதல் கால் சங்கிலி வரை அகபட்டிருக்கும் பன்னீர் சொல்லி எல்லாம் ஏதும் சாத்தியமில்லை
அட்டகாசமான தந்திரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது
கேள்வி கேட்பவரும் தன் கையில், பதில் சொல்வரும் தன் கையில் என்ற வகையில் இருவரையும் மோதவிட்டு ஒருவித பரபரப்பில் தமிழகத்தை வைத்து மவுனமாக சிரிக்கின்றது
தமிழகம் தவிக்கின்றது
கேரளத்தில் பிரணாப் விஜயன், இந்த ஆர்.எஸ்.எஸ் மிரட்டல் எல்லாம் என் கால்தூசுக்கு சமானம் என சவால் விடுகின்றார், திராவிட குணத்திற்குரிய தன்மானத்தோடு சவால்விடுகின்றான்
இவ்வளவிற்கும் அவர் திராவிட கட்சி அல்ல, ஆனால் மானமுள்ள தென்னக பொதுவுடமைவாதி, எப்படி அவரால் முடிகின்றது?
அவர் மீதோ, மலையாள அரசியல்வாதி மீதோ டெல்லியில் வழக்கு இல்லை, மர்ம சாவு மிரட்டல் இல்லை, சொத்துகுவிப்பு, அப்பல்லோ மர்மம், 2ஜி, என எந்த வழக்குமில்லை
அவரால் தன்மானத்தோடு சவால்விடமுடிகின்றது, நீங்கள் கால்தூசுக்கு சமம் என சொல்ல முடிகின்றது
தமிழகமோ கால் தூசாக அவர்கள் காலில் ஒட்டிகொண்டிருக்கின்றது, கேரள கம்யூனிஸ்டுகள் அப்படி துணிந்துநிற்க, தமிழக கம்யூனிஸ்டுகள் சசிகலா காலடியில் கிடக்கின்றார்கள்
திராவிட கொள்கை செழித்த தமிழகம் சங் பரிவார் கும்பலிடம் வீழ்ந்து கிடப்பதும், தேசிய கட்சிகள் வளர்ந்த கேரளா தன்மானத்தில் எழுந்து நிற்பதும் பெரும் ஆச்சரியமான விஷயங்கள்
எப்படி சாத்தியம்?
அவர்கள் சினிமா மாயையில் விழவில்லை, இன்னொன்று பணம் கொடுத்தெல்லாம் அங்கு வோட்டு வாங்கிவிட முடியாது, உள் மனதால் அவன் திராவிடனாகவும், உணர்வால் இந்தியனாகவும் இருக்கின்றான்.
சினிமா கொள்கை, வோட்டுக்காக இலவசமாக எதுகொடுத்தாலும் வாங்கும் கொள்கை என இருக்கும் தமிழன் இருக்கும் வரை தமிழகம் இப்படித்தான் இருக்கும்.
இதில் ஜெயா எப்படி செத்தால் அவனுக்கென்ன அக்கறை?,
செத்துவிட்டார், அடக்கம் செய்தாகிவிட்டது அவ்வளவுதான்,
அவன் ஸ்கூட்டி வாங்க தயாராகிவிட்டான்.
தனக்கு ஸ்கூட்டி கொடுத்ததினால்தானே பெட்ரோல் விலை தமிழகத்தில் உயர்ந்தது? இது பெரும் விலைவாசிக்கு வித்திடுமே என்றா அவன் யோசிக்க போகின்றான்?
இதில் லண்டன் டாக்டர், டெல்லி டாக்டர்கள் அள்ளிவிடுவதையா அவன் கண்டுகொள்ள போகின்றான்?
அவன் யோசித்தால் தமிழ்நாடு ஏன் இப்படி இருக்கின்றது?
போகட்டும்
ஆனால் பெரும் அரசியல் குரலாக, நீதி வேண்டும் , உரிமை வேண்டும் என்ற அரசியல் குரலாக ஒன்றும் ஓங்கி ஒலிக்கவில்லை
காரணம் கலைஞர் அமைதியாகிவிட்டார்
அவர் அமைதியானால் தமிழகத்தில் ஒரு குரலும் உருப்படியாக கேட்காது என்பது 1960ல் வைக்கபட்ட கணிப்பு, அது இன்று உண்மையாயிருக்கின்றது
தொண்டானாய் இருந்தால் கட்சியினரை திரட்டி, தலைவனாய் இருந்தால் சக கட்சிகளை திரட்டி பெரும் எதிர்ப்பினை காட்ட அவரால்தான் முடியும்
அவர் இல்லாத இடைவெளி அழகாக தெரிகின்றது. அதுவும் ஆளுக்கொரு பக்கத்தில் ஒவ்வொருவனும் தன் பட்டாளத்தோடு முணகிகொண்டிருக்கும் பொழுது மிக நன்றாக தெரிகின்றது
தமிழகத்தை திரட்டி காட்ட அவர் ஒருவரால்தான் முடியும் என விதி இருந்தால் அதனை யாரால் மாற்றமுடியும்?
இனி பல விஷயங்களில் அவரை தமிழகம் தேடிகொண்டே இருக்கும், அதுதான் கலைஞரின் வெற்றி.
அவர் விட்டுசென்றிருக்கும் “வெற்றி”டம்.