ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது
ஜெயலலிதா பேசிய ஆடியோ ஒன்று உலா வருகின்றது
நிச்சயம் தூத்துகுடி சம்பவத்தை திசைதிருப்ப வருகின்றது என்பது மட்டும் புரிகின்றது. தூத்துகுடியில் தினகரன் தரப்பு தீவிரம் காட்டும் நிலையில் ஏன் இது வெளிவந்தது என்பதுதான் தெரியவில்லை
ஆனால் இது ஜெயலலிதா அப்பல்லோவில் பேசியதா? அவரே பேசியதா என்றால் சந்தேகத்திற்குரியது
ஏன் என்றால் ஒரு இடத்தில் கூட “நான் செத்த பின்னாலும் கருணாநிதியினை விட கூடாது, நான் இப்படி ஆக அவர்தான் காரணம், என்னை கொல்ல சதி செய்தார் , திமுகவினை விட கூடாது. திருக்குவளை தீய சக்த்திகளை அழிக்க வேண்டும் செய்வீர்களா? செய்வீர்களா?” என கேட்கவே இல்லை
ஜெயா பேசியிருந்தால் நிச்சயம் அப்படித்தான் சொல்லியிருப்பார்
ஆடியோவில் அப்படி இல்லை என்பதாலும், அவரே அய்ய்யோ “அம்மா” என சொல்லிகொள்வதாலும் அதன் உண்மை தன்மை கேள்விகுரியதாகின்றது