ஜெயலலிதா மரணத்தின் மர்மம்தான் என்ன?
சின்னம்மா, பன்னீர் என அதிரடி செய்திகள் வந்துகொண்டிருக்க மிக முக்கியநபரின் பேட்டி மறைக்கபடுகின்றது
அது தடவியல் நிபுணர் சந்திரசேகரனுடையது, ராஜிவ் கொலைவழக்கில் மிக நுட்பமாக கொலைநடந்த விதத்தை சொன்ன அதே சந்திரசேகரனுடையது
ஜெயலலிதா சர்ச்சையில் நீதிமன்றம் உத்தரவிட்டால் உடல்கூறு செய்து அதற்கான காரணத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம் என சொல்கின்றார் அவர்
அனுபவம் பல இடங்களில் துப்பு துலக்கியவரும், பத்மபூஷன் பதக்கம் பெற்றவருமான அவரை எளிதில் நிராகரிக்க முடியாது
வரலாற்றில் எந்த தலைவரின் மரணமாவது இப்படி உடற்கூற்றில் நிரூபிக்கபட்டதா? என்பதற்கு மாவீரன் நெப்போலியன் உடல் சோதிக்கபட்டு அவன் மறைவிற்கு காரணம் மெல்ல கொல்லும் விஷம் என்பதை கண்டுபிடித்ததை அழகாக மேற்கோள் காட்டுகின்றார்
உணமையும் அதுதான், எத்தனையோ எகிப்து மம்மிக்கள் இப்படித்தான் செத்தார்கள் என நிரூபிக்கின்றது விஞ்ஞானம்
ஜெயா சர்ச்சையில் அவர் சொல்ல வருவது அதுதான், உடலை ஆயு செய்தால் நிச்சயம் அவர் இறந்த நாளை கூட கண்டுபிடிக்கலாம்
எங்கோ ஏதோ சிக்குகின்றது
முதலாவது சசிகலா காட்டும் பயங்கர வேகம், அவர் உடை தைத்திருக்கும் ஸ்டைலுக்கு “அந்த 75 நாட்கள்” ஆகியிருக்கும்
இரண்டாவது ஒருவர் தகவல் அறியும் சட்டத்தில் கேட்கும் கேள்விக்கு அப்பல்லோ மருத்துவமனை “சொல்ல முடியாது போ” என முகத்தை திருப்பி கொள்வது
மூன்றாவது அப்பல்லோவினை விடுங்கள், டெல்லி எய்ம்ஸ் குழுவின் அமைதி, அவர்களும் ஜெயாவினை பார்த்தார்கள் அவர்களின் அறிக்கை பிரதமருக்கே அனுப்பபட்டது
பிரதமர் மகா அமைதி, ஏதும் கேட்டால் வெங்கைய நாயுடு அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்பார்
சரி நாயுடு நீர்தான் அடக்கம் வரை கூடவே இருந்தீர் அல்லவா?, மருத்துவ அறிக்கை எங்கே என்றால் அவரும் அமைதி
ஏன்? என்றால் தெரியாது
சில கணக்குகளை கூட்டி கழித்து பாருங்கள்
சசிகலா காட்டும் வேகம், நீதிபதியே தனக்கு சந்தேகம் இருப்பதாக சொல்வது,
சசிகலா முதல்வராக நாள் குறிக்கும் போது, திடீரென ஒரு பத்மபூஷன் விஞ்ஞானி ஜெயா உடலை ஆய்வு செய்தால் அவர் எப்படி இறந்தாலும் கண்டுபிடிக்கலாம் என்கின்றார்
என்னவோ நடக்கின்றது, சில விஷயங்களை நோக்கினால் அமைதியாக புன்னகைக்கலாம்
நாம் பாமரர்கள், ஜெயா இறந்துவிட்டார் என்பதை மட்டும் நம்பலாம்
ஆம் ஜெயா இறந்துவிட்டது மட்டும்தான் இப்போதைக்கு சர்ச்சை இல்லாதது
கால்கள் அகற்றபட்டிருக்கலாம் என்கின்றார்கள் சிலர்,
காலா? அதிமுகவிலிருந்து ஜெயா பெயரே அகற்றபட்டுகொண்டிருக்கின்றது
இதில் எது முன்பு ஜெயாவிற்கு அகற்றபட்டால் என்ன?
ஜெயாவின் தோழி சின்னம்மாதான் அடுத்த வாரிசு கட்சிக்கும் சரி, ஆட்சிக்கும் சரி என வரிந்து கட்டுபவர்களிடம்
பசும்பொன் தேவர் அவர்களை ஒரு இஸ்லாமிய பெண்மணிதான் வளர்த்தார், தேவருக்கு பின் அவரின் கட்சி அந்த அம்மா தலமையினைத்தான் ஏற்றிருக்க வேண்டும் ?
தேவரின் தங்கை வழி பேரன் எப்படி தேவரின் வாரிசு என வருகின்றார் என்றால் முறைக்கின்றார்கள்.
என்ன முறையில் இவர்கள்
வாரிசுகளை தேர்ந்தெடுப்பார்கள் என்பது புரியவே இல்லை
ஏரியாவுக்கு ஒரு வாரிசு முறை இருக்கும் போல