ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது

 

ஜெயாடிவிக்கு அட்டகாசமாக சீண்டல் வருகின்றது.

பழனிச்சாமி கோஷ்டி ஜெயா நினைவுநாள் என கருப்புசட்டை போட்டு அழிச்சாட்டியம் செய்யும்பொழுது எப்படி கன்னியாகுமரி கடற்கரையினை மீணவர்கள் காணாமல் போன விவகாரங்களை அதனை பழனிச்சாமி கண்டுகொள்ளாமல் இருப்பது பற்றியெல்லாம் மக்களுக்கு எப்படி நினைவுபடுத்துவது என யோசித்திருக்கின்றார்கள்

மண்டைக்குள் மணியடித்திருக்கின்றது, அதுவும் மாதா கோயில் மணி

உடனே கடலோர கவிதைகள் எனும் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் படமாக்கபட்ட படத்தினை ஒளிபரப்பியாயிற்று

அந்த படம் முழுக்க அந்த கடல் வரும், அந்த கடலை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த புயலும் மீணவர் நினைவும் வரும்

பலருக்கு வந்துவிட்டது, உடனே இங்கு வராமல் பழனிச்சாமி அங்கு என்ன கலர் கலராக சட்டைபோட்டுகொண்டிருக்கின்றார் என முணுமுணுக்க தொடங்கியாயிற்று

எப்படி திட்டம் பார்த்தீர்க்களா? ஜெயா டிவி அசத்துகின்றது

படம் நன்றாகத்தான் இருக்கின்றது, ஆனாலும் அந்த ஜெனிபர் டீச்சர் வேடத்தில் குஷ்பு நடித்திருந்தால் படம் கூட‌ 1 வருடம் ஓடியிருக்கும்