ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது
“ஒரு சபதம் செய்கின்றேன், என் வாழ்நாளில் திமுகவினை பூண்டோடு அழிப்பேன்..” என அருகிருந்த சசிகலா மீது சத்தியம் செய்யாத குறையாக முழங்கினார் ஜெயலலிதா
இன்று அவர் இல்லை, அதனை விட பரிதாபம் அவர் மரணம் மீதான ரகசியம் அவர் கட்சிகாரர்களாலே மறைக்கபடுகின்றது
அந்த பரிதாபத்திற்குரிய ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை திமுகவின் மு.க ஸ்டாலின் பட்டியல் இட்டு கேள்விகள் கேட்கின்றார்.
சாதரணமாக கடந்துபோக கூடிய கேள்விகள் இல்லை அவை, எந்த நீதிபதியும் தயக்கமின்றி ஏற்றுகொள்ள கூடிய கேள்விகள்.
அட்டகாசமான கேள்விகள் அவை, அந்த கேள்விகளுக்காக மு.க ஸ்டாலினை பாராட்டலாம்.
அம்மா, அம்மா என குனிந்து நின்ற அதிமுகவினர் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் எதிர்கட்சி ஸ்டாலின் கேட்பது மகா விசித்திரம்.
ஜெயா இருந்தவரை அவர் சிறைசென்றால் கூட அழிச்சாட்டியம் செய்த கட்சிகாரர்கள் யாரையும், அவர் மரணத்தில் சில நியாயமான கேள்விகளை கேட்க வேண்டிய நேரத்தில் காணவே இல்லை, அவ்வளவும் வேஷம்.
ஆக ஜெயாவிற்கான நியாயத்தினை திமுகத்தான் பெற்றுகொடுக்க போகின்றது.
தன் வாழ்நாள் முழுக்க திமுகவுன் நடத்திய யுத்தத்தில் தன் மரணத்திற்கு பின் தோற்றிருக்கின்றார் ஜெயலலிதா
அவரின் ஆன்மா இப்பொழுது முன்பு அவர் திமுகவிற்கு செய்த சகல அநியாயங்களுக்கும் மன்னிப்பு கேட்டு நிச்சயம் கதறிகொண்டிருக்கும்.
சிறப்பாக ஆட்சி நடத்துகிறோம்: செல்லூர் ராஜு
திருத்தி கொள்ளும் அமைச்சரே, அது ஆட்சி அல்ல நகைச்சுவை காட்சி.