ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்
என்ன சர்ச்சை இருந்தாலும், ஆயிரம் குறைகளை சொன்னாலும் கந்துவட்டி கொடுமையினை ஜெயா அடக்கி வைத்திருந்த விதம் பாராட்டுகுரியது.
தன் வாக்குவங்கி பாதிக்கபடும் எனினும் அவர் மிக துணிச்சலாக அதனை அடக்கி வைத்திருந்தார்
அதனால்தான் தமிழகத்தில் கந்துவட்டி கொடுமைகள் கட்டுபடுத்தபட்டிருந்தன, ஜெயாவினை நோக்கி சொல்லபடும் மிக சில நல்ல விஷயங்களில் நிச்சயம் அதுவும் ஒன்று.
அவர் இல்லாத காலத்தில் அது முளைக்கின்றது, பலி வாங்குகின்றது
கந்துவட்டிக்கு பிராதான இடம் மதுரையும் அதற்கு தேற்கேயும் உள்ள பகுதிகள். அதுவும் நெல்லை மாவட்டம் மகா மோசம்.
உலகிலே கொடுமையான தொழில் வட்டி. ஹிட்லர் யூதர்கள் மேல் கொடூரமாக பாய அந்த வட்டிகொடுமைதான் காரணம்
எந்த தொழிலில் பணம் போட்டாலும் நஷ்டம் என்றால் ஒன்றும் செய்யமுடியாது, ஆனால் வட்டி தொழிலில் அடித்து பிடுங்கிவிடலாம். ஒரே முதலீடு மனசாட்சி இருக்கவே கூடாது
கடன் என்பது அவ்வளவு பொல்லாத விஷயம், அதுவும் நெல்லை பகுதியில் அது மெல்ல கொல்லும் விஷம்
கடந்த மாதம் வள்ளியூர் பக்கம் 5 லட்சத்திற்கு 15 லட்சம் வட்டிகட்டிவிட்டு இன்னும் கட்டமுடியாமல் ஒரு ஆசிரியர் உயிரிவிட்டார்
இதோ இன்று குடும்பமே தீகுளித்திருக்கின்றது, அதுவும் அந்த பிஞ்சுகள் கதறும்பொழுது நாமெல்லாம் தமிழர்களா? அதுவும் நெல்லையர்களா என நாணத்தால் தலை குனிகின்றோம்
பிஞ்சுகளை கொன்ற நல்லதங்காள் கதையினை நேரில் பார்த்தது போல் நெஞ்சம் கனக்கின்றது
இனியும் என்ன மரியாதை
அய்யா பழனிச்சாமி, ஜெயா வழியில் என்ன ஆட்சி நடத்துவீர்களோ தெரியாது. ஆனால் இந்த கந்துவட்டி கொடுமைக்கு மட்டும் அவர் வழியில் முடிவு கட்டுங்கள்
நிச்சயம் அது நற்பெயரை பெற்று கொடுக்கும்
உங்களை கெஞ்சி கேட்கின்றோம் மிஸ்டர் பழனிச்சாமி இன்னொரு உயிர் போகுமுன் விழித்துகொள்ளுங்கள்
அதற்கு முன் இந்த குடும்பத்திற்கு நியாயம் கொடுங்கள்,
அவர்களும் இம்மாநில அபலைகள். உங்கள் ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என நம்பி முடியாமல் நெருப்பு பக்கம் சென்றுவிடும் அளவு பாதிக்கபட்டவர்கள்
ஜெயாவின் கனவில் இதனையாவது நிறைவேற்றுங்கள் மிஸ்டர் பழனிச்சாமி, அந்த பிஞ்சுகளின் வேதனைக்காக களமிறங்குங்கள்.
இன்னும் நெஞ்சத்தால் எரியும் எத்தனையோ பாதிக்கபட்ட மக்களுக்காக உருகி வேண்டுகின்றோம்
இதற்கொரு முடிவு கட்டுங்கள்.. ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வதிக்கும்.
கடவுள் அன்புக்கு ஆதாரமாக மனிதனை படைத்து வைத்தார் …
மனிதன் அன்பை பகிர பொருளை வைச்சு ….
பின் பொருளுக்கு பதில் பணம் புது வரவாச்சு…..
பணம் வரவுக்கு அதிகமாக செலவுமாச்சு…..
அதை ஈடுகட்ட கடனும் வாங்கியாச்சு….
அதுக்கு பலன் வாங்கிய கடனுக்கு அதிகமாக பணத்தை அன்பளிப்பா கொடுத்தாச்சு….
அன்பளிப்பை கட்டாயமாக்கி வட்டினு பெயர் வைச்சு…
பின் அதுவே சிலருக்கு தொழிலுமாச்சு….
கடனை விட அதிகமாக வட்டியும் கட்டியாச்சு….
அல்லும் பகலும் உழைத்த பணமெல்லாம் வட்டியா கட்டியாச்சு…..
அரைவயிறும் காலியாச்சு…..
வாழ வழி தேடி ஆட்சியர் கள் அதிகாரிகள் கதவை தட்டியாச்சு…
அவர்களோ கதவோட காதையும் மூடியாச்சு….
நீதி கேட்டு ஏமாந்தாச்சு….
வாழ்க்கை வெறுப்பாச்சு..
வெறுப்பில் தஞ்சம் கேட்டு நெருப்பு புகுந்தாச்சு…..
ஆட்சியாளர், அதிகாரிகள் மனசாட்சிக்கு என்னாச்சு…..
கடவுள் தந்த அன்பு எஙக போச்சு….
இடையில் மனிதனோட ஆசையில் மறைஞ்சே போச்சு…..
கந்துவட்டி கட்டுபடுத்த அரசும் தவறியாச்சு…..
மனித இனமே
யாருக்கிட்ட போயி நீதி கேட்க அரசாங்க அண்ணாச்சி……
நெல்லையிலே நடந்ததே இறுதியாக இருக்கனும் அரசாங்க அண்ணாச்சி ….
மனசாட்சியோடு
A.S.அசோக் பாண்டியன்….