ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

இது பாவிகளின் ஆட்சி என சிலர் சொல்லிகொண்டிருக்க இவரோ ஆவிகளின் ஆட்சி என சொல்லி கொண்டிருக்கின்றார்

இன்னும் ஆழமாக ஜெயா ஆவி எப்படி வந்தது என கேட்டால், மெரினாவிற்கு கலைஞர் சென்றதும் அதை பொறுக்கமுடியாத ஜெயா ஆவி பழனிச்சாமிக்குள் வந்துவிட்டது என்பார்

எனினும் இதை எல்லாம் நம்ப முடியாது

ஜெயா ஆவி உண்மையிலே புகுந்திருந்தால் பழனிச்சாமி சசிகலாவினை சந்தித்து அழுதிருப்பார், கொடநாட்டில் மல்லாக்க படுத்திருப்பார், சில நேரம் எங்கிருக்கின்றார் என தெரியாத அளவு மாயமாகி இருப்பார், முக ஸ்டாலின் மேல் பல அவதூறு வழக்கு பாய்ந்திருக்கும்

அமைச்சரவை அமாவாசை தோறும் மாறிகொண்டிருக்கும்

பழனிச்சாமி இப்படி எல்லாம் செய்யவில்லை என்பதால் அவர் உடலில் ஜெயா ஆவி இல்லை என்பது எல்லோருக்கும் புரிகின்றது

ஆனால் “பேய் ஆட்சி செய்தால் பிணம்தின்னும்..” என பாரதி சொல்லியிருக்கின்றபடியால் ஏதோ ஒரு பேய் பழனிச்சாமி உடலில் புகுந்திருக்கலாம்

அந்த பேய் எது என தெரியாமல் இவர் ஜெயா ஆவி என சொல்லி இருக்கலாம்

எதற்கும் ஜெயா வழக்கபடி இவர்கள் கேரள பணிக்கர்களை, நம்பூதிரிகளை பார்ப்பது நல்லது,

ஆனால் பணிக்கர்கோஷ்டி வெள்ளத்தில் சிக்கி எங்கு இருகின்றது ? என தேடுவதுதான் கடினம்