ஜெயா சிலையில் மாறுதல் செய்வார்களாம் …
எதனை செய்தாலும் அதில் முழு கவனத்தோடு செய்பவர் கலைஞர், அண்ணாவிற்கும் பெரியாருக்கும் எத்தனையோ சிலைகள் வைத்தார், யாரும் ஒரு குறை சொல்லமுடியாத அளவு நேர்த்தியொடு அவை அமைந்தன
அவர் அமைத்த கட்டபொம்மன் கோட்டை, பூம்புகார் கூடம் என எல்லாமே வலுகவனமாக அமைக்கபட்டவை
புதிய சட்டமன்ற கட்டடத்தை இரவு பகலாக பார்வையிட்டு வடிவமைத்தார் கலைஞர். பொதுவாக தேர் என்றால் அவருக்கொரு விருப்பம், ஊர் கூடித்தான் தேர் இழுக்க வேண்டும் என்ற அரசியலின் அடிநாத கொள்கை அதில் ஒளிந்திருக்கலாம், கலைஞரின் தேர்வுகள் ஒவ்வொன்றும் ஆழந்த அர்த்தமிக்கவை
வள்ளுவர் கோட்ட தேர் முதல், ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தது என அவரின் தேர் ரசனைக்கு ஏக விஷயங்கள் உண்டு
புதிய சட்டமன்றத்தில் அழகு தேர் அசைந்து வருவது போல படம் வைக்க முடியாவிற்று, மாதிரியினை கலைஞரிடம் காட்டினார்கள், தேர் அழகாக இருந்தது. கூர்ந்து நோக்கிய கலைஞர் சொன்னார், அசைந்து வரும் தேரென்றால் தோரணம் ஆட வேண்டாமா? இது நிற்கின்ற தேர் அல்லவா?
மறுபடி அசையும் தேர் வரைந்து கொடுத்தார்கள், அதில் ஒவ்வொரு தோரணமும் ஒவ்வொரு மூலைக்கு பறந்து கொண்டிருந்தது, தேர் அசைந்தால் இப்படி ஒவ்வொரு மூலைக்கும் தோரணம் பறக்குமா? அர்த்தம் வேண்டாமா என்றார் கலைஞர்
அதன்பின் அசையும் தேர் படம் முழு கவனத்தோடு உருவாயிற்று, கலைஞரின் கவனம் அப்படி இருந்திருக்கின்றது
இதோ ஜெயலலிதாவிற்கு சிலை திறந்தார்கள், அது ஆறுவிரலும் , காந்திமதி உருவமும் கொண்டு இருக்கின்றது, கொஞ்சமும் கவனிக்காமல் சிற்பிக்கு மோதிரம் எல்லாம் கொடுத்தார்கள்
ஊரே சிரித்து கலாய்க்க, அவர்களால் அது ஜெயலலிதா என சொல்லமுடியவில்லை, இனி சிலையில் மாறுதல் செய்வார்களாம்.
ஒரு சிலையினில் கூட இவ்வளவு அலட்சியமாக இருப்பவர்கள்தான் இந்த மாபெரும் மாநிலத்தை ஆள்கின்றார்களாம், தமிழகம் எவ்வளவு பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது என்பது இப்பொழுது புரிகின்றது.