ஜெயா பாணியினை கொஞ்சமும் பிசகாமல் பின்பற்றும் சின்னம்மா..

சசிகலாவினை பார்க்கும்பொழுது 30 வருடம் ஜெயாவிடம் அரசியல் படித்தவர் என்பது புரிகின்றது

இப்போதைக்கு அப்படியே ஜெயா பாணியினை கொஞ்சமும் பிசகாமல் பின்பற்றுகின்றார்,

தேர்தலில் எப்படியோ? அங்குதான் அவருக்கு சிக்கலே இருக்கின்றது.

ஸ்டாலினை பார்க்கும்பொழுது கலைஞரிடம் பாடம் படித்தவராக தோன்றவே இல்லை, ஏதோ கலைஞரை தொலைதூரத்தில் இருந்து பார்த்துவிட்டு பதவிக்கு வந்தது போல தோன்றுகின்றது

கலைஞரிடம் பாடம் படித்துவிட்டு வாரிசாக வந்திருந்தால் இப்படி இருக்கமாட்டார்

கலைஞரின் வரம், அவரின் அறிக்கைகள், வாதங்கள், அழகான உவமையோடு கூடிய விளக்கங்கள், எல்லாவற்றிற்கும் மேல் எதிர்கட்சியினை போட்டு தாக்கி கிழித்தெறியும் தைரியம்.

படித்தால் அப்படியே கட்டி தழுவும் எழுத்துக்கள் அவருடையது, பேசினால் இன்னும் கொஞ்சநேரம் பேசமாட்டாரா? என பேச வைக்கும் வார்த்தைகள் அவருடையது

அவ்வளவு அழகாக வார்த்தைகளை தொடுப்பார்

மிக அழகான அரசியல் கிண்டல்களும் அவருக்கு கைவந்த கலை, எந்த சூழ்நிலையும் கலகலப்பாக்கும் வித்தை அவருடையது

அதனால்தான் அவரை சுற்றி ஒரு கூட்டம் எப்பொழுதும் இருந்தது.

இது எல்லாம் ஸ்டாலினிடம் சுத்தமாக இல்லை, ஒரு ஸ்பெஷாலிட்டியும் இல்லை

கலைஞரின் மகன் என அறியபடுகின்றாரே ஒழிய, ஒரு சிறப்பான அடையாளம் ஏதுமில்லை, இது நீண்ட நாளைக்கு சரிவராது.

பொதுவாக நன்கு பயிற்றுவிக்கபட்ட வாரிசுகள் தங்கள் பெற்றோரை விட ஒரு படி மேலே பாய்வார்கள்.

இந்திரா, சஞ்சய் எல்லாம் அப்படி அதிரடி காட்டினார்கள், அவர்களுக்கு அது இயல்பாய் வாய்த்தது

ஜெயலலிதா எம்ஜிஆரின் கடைசிகாலங்களில் அவருக்கு கொடுத்த நெருக்கடியினை எம்ஜிஆர் சமாதியிடம் கேட்டால் சொல்லும்..

ஸ்டாலின் அப்படி அல்ல, திணறுகின்றார்.

உண்மையில் அக்கட்சியும் சிக்கலில்தான் இருக்கின்றது.

அண்ணாவின் “தளபதி” பட்டம் மட்டுமே அவருக்கு வெற்றி கொடுக்கவில்லை

பட்டங்களை தாண்டி செயல்பட வேண்டியது ஏராளம் உண்டு

கலைஞர் ஏன் இவ்வளவு நாளும் இழுத்தடித்தார் என்பது இப்பொழுதுதான் விளங்குகின்றது.