ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது….
நெடுநாளைக்கு பின் ஒரு நண்பரை மலேசிய தமிழ்நண்பரை சந்திக்கமுடிந்தது, அவர் பேச்சு முழுக்க ஜெயா மர்ம மரணம் என்பதை சுற்றி சுற்றி வந்தது
வடகொரிய பிரச்சினை என எதனை பற்றி பேசினாலும், மனிதர் அப்பல்லோ பற்றியே பேசிகொண்டிருந்தார், ஒரு கட்டத்தில் பேச்சு இப்படி மாறியது
“அதில் நிறைய மர்மம் இருப்பதாக சொல்கின்றார்களே..”
“தெரியாது, ஆனால் அவர் உடல் எடை ஏறியிருந்தது, மிகுந்த உடல் உபாதைகள் அவருக்கு இருந்ததை மறுக்கமுடியாது..”
“முன்பு அவர் சிகிச்சை எடுத்த ஒரு செய்தியும் வரவில்லையே…”
“அவர் அப்படித்தான், ஒரு செய்தியும் அவரைபற்றி முழுமையாக வராது, வந்ததுமில்லை..”
“அப்படியானால் அதில் மர்மம் இல்லையா? ஒரு விடியோ, ஒரு படம், நமபகமான ஒரு ஆதாரம் கூட இல்லையே..”
:அமாம், இல்லை ஆனால் ஜெயா அதனை விரும்ப்பாதவராக இருக்கவும் வாய்ப்பு உண்டு..”
“என்னய்யா நீர், மருந்தினை எல்லாம் அவரை கேட்டா ஏற்றினார்கள்? அப்படி படம் எடுத்தால் என்ன?..”
“எடுத்திருக்கலாம், ஏன் எடுக்கவில்லை என தெரியவில்லை..”
“மறைக்கபடும் விஷயம் உண்டு என்கின்றார்களே, பலவிதமான மர்மம் இருக்கின்றது என உலகெல்லாம் செய்திகள் வருகின்றதே, அது கொலை இல்லையா?..”
அதற்கு மேல் பொறுக்கமுடியவில்லை, பொங்கிவிட்டேன்
“என்ன நினைத்துகொண்டிருக்கின்றீர்கள் எங்களை பற்றி?,
மகாத்மா காந்தியினை கொன்றது யார்? இந்திராவினை கொன்றது யார்?
ராஜிவினை கொல்ல மறைமுக உதவிகள் செய்தது யார்?
இன்னும் பல அரசியல் கொலைகளை செய்தது யார்?
சாட்சாத் நாங்கள்தான்.
பெரியார் மீது எத்தனையோ முறை கல் வீசி கொலை முயற்சி நடத்தபட்டிருக்கின்றது, காமராஜர் டெல்லியில் வீட்டுக்கு தீவைக்கபட்ட கொலைமுயற்சியில் இருந்து தப்பினார்..
எம்ஜிஆர் கூட சுடபட்டிருக்கின்றார், கலைஞருக்கு பலமுறை விபத்து நடந்திருக்கின்றது,
ஆக கொலையோ, கொலை முயற்சியோ அங்கு புதிதே அல்ல,
ஏற்கனவே ஏகபட்ட அரசியல் கொலைகளை செய்தவர்கள் நாங்கள்..புரிகின்றதா?”
அதன் பின் மனிதர் பேசவே இல்லை
மர்மங்களும், கொலைகளும் ஏதோ இந்த நாட்டிற்கு புதிது போல பேசிகொண்டிருந்தால் வேறு என்னதான் சொல்வது???
பல நண்பர்கள் பேசுகின்றார்கள், உங்களால் நாங்களும் குஷ்பூ ரசிகர்கள் ஆகிவிட்டோம் என்கின்றார்கள்
இப்பொழுதெல்லாம் நிறைய குஷ்பூ படங்களை பார்க்கின்றோம், குஷ்பூவினை நினைவு படுத்தியற்கு நன்றி என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்..
இனி அவரின் பேச்சுக்களை எல்லாம் கவனித்து உற்சாகபடுத்துவோம், ஆதரவளிப்போம் என்றெல்லாம் உறுதியளிக்கின்றார்கள்
ஒரு குஷ்பூ ரசிகனுக்கு இதனை விட என்ன பெரும் மகிழ்ச்சி இருக்க முடியும்?
ஆனந்த கண்ணீர் என்பதின் அர்த்ததை அறிந்து கொண்டிருக்கின்றேன்…