ஜெயா மறைவின் மர்மம் பற்றிய உரையாடல்….

ஒரு நண்பரை சந்திக்க முடிந்தது, அவர் பேச்சுக்கள் ஜெயா மரணத்தை சுற்றி வந்தன.

ஏன் மருத்துவ அறிக்கை வரவில்லை? ஏன் புகைப்படம் இல்லை? ஏன் ஒருவரும் முழுவதுமாக ஒன்றும் சொல்லவில்லை என பல கேள்விகள்

முடிந்த மட்டும் எனக்கு தெரியாது, சிகிச்சை பலனின்றி இறந்ததாக சொன்னார்கள் என்றேன்.

அவ்வளவு பெரும் பதவி வகித்தவர், ஏன் முறையான போஸ்ட்மார்ட்டம் இல்லை என்றார்?

நோயில் கொஞ்சம் கொஞ்சமாக செத்தவர்களுக்கு என்ன போஸ்ட்மார்ட்டம்? முதல்நாள் உடல் பரிசோதனையிலே எல்லாம் தெரிந்துவிடாதா? என்றேன்

இல்லை இல்லை கால்களை காணவில்லையாம் என்றார்

தெரியாது, தொட்டு வணங்க அக்கட்சியிர் ரகசியமாக ஹிட்லரின் கால்களை போல கொண்டு சென்றிருக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்றேன்

முறைத்தார்

ஏன் உங்கள் நாடு மறைக்கின்றது? வேறு ஏதோ நடந்திருக்கலாம் என செய்திகள் வருகின்றதே, ஏராளமான தகவல்கள் வருகின்றன‌ என்றார்

அப்படி எல்லாம் அல்ல, இது முழுக்க நோய்தான் என்றேன்

இல்லை வேறுமாதிரி என்கின்றார்கள் என்றார்

வேறு மாதிரி என்றால் என்ன என்றேன்?

கொலை என கூட செய்திகள் வருகின்றன, நீதிபதியே சந்தேகம் இருக்கின்றது என சொல்லியிருக்கின்றாரே என்றார்?

அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை, சீறிவிட்டேன்.

“ஜெயா விஷயம் பற்றி முழுக்க யாருக்கும் தெரியவில்லை, நோய்தான் காரணம் என்பது முடிவு

ஆனால்எங்கள் நாட்டைபற்ற்றி என்ன நினைக்கின்றீர்கள்?, மத கலவரம் முதல் சாதி கலவரம் வரை கொன்று குவிப்பர்கள் நாங்கள்

பஸ்ஸை கொளுத்தி கொல்வோம், அலுவலகத்தை எரித்து கொல்வோம், வாக்கிங் போவோரை வெட்டி கொல்வோம் எல்லாம் செய்வோம்

சில நேரம் ஊழல் தலைவர் சிறையில் இருந்தால் நாங்கள் சாவோம், தேர்தலில் தோற்றால் சாவோம், ஈழத்தில் சண்டை என்றால் எங்களை கொளுத்திகொள்வோம்

இப்பொழுது காவேரிக்காக கூட கொளுத்திகொண்டோம்

இப்படியாக‌ ஒன்று கொல்வோம் அல்லது எங்களையே கொளுத்துவோம்

அவ்வளவு ஏன்? மகாத்மா காந்தி, இந்திரா என எத்தனையோ பேரினை கொன்றவர்கள் நாங்கள், எதுவும் இந்தியாவிற்கு புதிதல்ல என்றேன்”

ஆமாம் என ஒப்புகொண்டவர் அதன்பின் ஜெயா பற்றி பேசவே இல்லை