ஜெயா வாழும்பொழுது ….

ஜெயா வாழும்பொழுது எங்கள் அம்மாவினை அமெரிக்கா வணங்கியது, ரஷ்யா தாலாட்டியது, சீனா தலைசீவி விட்டது, எங்கள் உலக நாயகியே என கத்தி பேனர் வைத்து, பாட்டுபாடி இல்லாத அழிச்சாட்டியம் செய்தார்கள்

நேற்று உண்மையில் உலகெல்லாம் இருந்து பெரும் நாடுகளிடமிருந்து ஜெயலலிதாவிற்கு அஞ்சலி வந்தது

பாகிஸ்தான், இலங்கை, இஸ்ரேல், சிங்கப்பூர் என பல நாடுகள் அந்த பெண் முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தனர் , உலகளாவிய உன்னத பெண் அரசியல்வாதிகள்டமிருந்தும் வாழ்த்து வந்தது

ஒரு பயலும் அதனை சொல்லி அழுததாக தெரியவில்லை

இதற்காகத்தான் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்திருந்தார் ஜெயலலிதா

இந்த நாஞ்சில் சம்பத், சரஸ்வதி, நிர்மலா பெரியசாமி போன்ற ஸ்பீக்கர்களை காணவே இல்லை

நாம் மிக மிக தேடியது கராத்தே ஹூசைனி என்பவரை, காணவே இல்லை, ஒருவேளை அம்மா போலவே குழிக்குள் மறைந்துகொண்டாரோ என்னவோ,

செய்தாலும் செய்வார் மனிதர் ஒரு மாதிரியானவர்.

இன்னும் பலரை காணவே இல்லை

சிந்தனைகள் இப்படி இருக்க இன்பாக்சில் ஒருவன் கேட்கின்றான்

“அண்ணே..அந்த போயஸ் வீடு, கொடநாடு பங்களா, சிறுதாவூர் பங்களா, ஐதராபாத் தோட்டம், அந்த கார், இதெல்லாம் இனி யாருக்குண்ணே..இல்ல எம்ஜிஆருக்கு பின் அவர் சொத்து கட்சிக்கு வந்திச்சாம் அதாம்ணே..”

இதற்கு கவுண்டமணி பாணிதான்

“டேய்..யார பாத்துடா என்ன கேள்வி கேட்ட..

எப்ப்டிடா என்ன பார்த்து கேக்கலாம்…

இங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களை எல்லாம் விட்டுட்டு என்கிட்ட ஏண்டா கேட்ட…”

இதில்தான் ஜெயலலிதா கலைஞரிடம் பாடம் படிக்காமல் போனார் என்பது, கலைஞரை படிக்காமல் வழக்குகளில் அனுபவமில்லாமல் சிக்கினார், நண்பர் என்பவரிடமும் சிக்கினார்

கலைஞருக்கும் அன்பழகன் என நீண்டகால‌ நண்பருண்டு, அன்பழகனால் அறிவாலயத்தில் ஒரு நாற்காலியினை நகர்த்த முடியும்?

வைகோ எனும் நன்பணை வெட்ட வேண்டிய நேரத்தில் வெட்டியவர் கலைஞர், கூட வைத்திருந்தால் கலைஞர் இப்பொழுது வேலூரில் புலி ஆதரவு வழக்கில் உள்ளே இருக்க மாட்டாரா?

இது போக ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் என நண்பர் பட்டாளம் உண்டு, ஆனால் யாராவது கட்சியில் தலையிட முடியும்?
ஆற்காடு வீராசாமியினை காணவே இல்லை

எல்லாவற்றிற்கும் மேல் எனக்கு பின்பு இந்த கோபாலபுரம் வீடு அறக்கட்டளைக்கு என உயில் வைத்திருப்பவர் கலைஞர்

இப்படி எல்லாவிதத்திலும் மகா முன்னெச்செரிக்கையான மனிதர் அவர்

ஜெயா எவ்வளவோ படித்தார் வாசித்தார், கொஞ்சம் கலைஞரையும் படித்திருந்தால் எவ்வளவோ சிக்கல்களிலிருந்து தப்பி இருக்கலாம்

சரி இருக்கட்டும்

டேய் இன்பாக்சில் வந்தவனே

“டேய்..யார பாத்துடா என்ன கேள்வி கேட்ட..

எப்ப்டிடா என்ன பார்த்து கேக்கலாம்…

இங்க எத்தனை பேர் இருக்காங்க, அவங்களை எல்லாம் விட்டுட்டு என்கிட்ட ஏண்டா கேட்ட…

 

Image may contain: 2 people , people standing, tree and outdoorImage may contain: mountain, plant, sky, grass, outdoor and nature