ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது
இந்த ஜெருசலேம் விவகாரத்தால் உலகமே அதிர்ந்திருக்கின்றது, பாலஸ்தீனத்தில் வன்முறை தொடங்கி இரண்டுபேர் கொல்லபட்டாயிற்று
துருக்கி இஸ்தான்புல்லில் லட்சகணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடட்துகின்றனர், இஸ்லாமிய கவுன்சில் நாடுகள் இன்னும் பல இயக்கங்கள் பாலஸ்தீனருக்கு நீதிவேண்டும் என கிளம்புகின்றன
ஆச்சரியமாக இந்திய முஸ்லீம்கள் மகா அமைதி, ஏன் என்று தெரியவில்லை. அமெரிக்க தூதரகம் முன் முன்பெல்லாம் கத்துவார்கள், இப்பொழுது ஏனோ மகா அமைதி
இது மேற்காசியாவில் நடக்க, கிழக்கே வடகொரியா ஏதோ ஓலைவெடி வெடிக்கபோவது போல அணுகுண்டு யுத்தம் வெடிக்கலாம் தென்கொரியா அழியலாம், அமெரிக்கா நாசமாகலாம் என சொல்லிகொண்டே இருக்கின்றது
இம்மாதிரி செய்திகள் வர தொடங்கினால் இந்த அல்லேலூயா கிறிஸ்தவர்கள் அட்டகாசமும் தொடங்கிவிடும்
கடைசி காலம் வந்துவிட்டது, நேபாளத்தில் பூகம்பம் , இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு, அணுயுத்தம் , புதிய ஜெருசலேம், ஆம் சந்தேகமே இல்லை இது எல்லாம் பைபிளில் சொல்லபட்டது, உலகம் அழியபோகின்றது, இயேசு வருகின்றார் அல்லேலூயா… என வழக்கமான ஒப்பாரியினை தொடங்கிவிட்டார்கள்
இந்த அழகான உலகம் அழிந்து போவதில் அவர்களுக்கு ஏன் அவ்வளவு ஆசை, அவ்வளவு ஆனந்தம் ,என்பதுதான் புரியவே இல்லை