ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது

ஜெருசலேம் விவகாரத்தில் இந்தியா நியாயமான வோட்டளிப்பினை செய்துள்ளது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே வாக்களிதுள்ளது

தாங்கள் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுப்போம், பாலஸ்தீனருக்கு எதிரான கொடுமைகளை ஆதரியோம் என நிரூபித்திருக்கின்றது இத்தேசம்

மேற்கு ஜெருசலேம் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் இருக்கின்றது, அதனால் சிக்கல் இல்லை என இந்தியா சொல்லும் என எதிர்பார்த்தார்கள், இந்தியா அப்படி சொல்லவில்லை காரணம் ஜெருசலேம் என்பது இஸ்ரேலால் கைபற்றபட்டு ஆக்கிரமிப்பு செய்யபட்ட பகுதி

6 நாள் போரின்பொழுது அவர்களின் தளபதி மோசே தயான், மிக அட்டகாசமாக அதனை செய்து முடித்தார்

ஆக அது ஆக்கிரமிக்கபட்ட பகுதி என்பதில் இந்தியா உறுதியாய் நிற்கின்றது, இது தவறு இந்தியா இஸ்ரேல் பக்கம் நிற்கவேண்டும் என சொல்லிகொண்டிருக்கின்றான் சிலர்

நியாயம் ஒரு பக்கம் இருக்கட்டும் ராஜ தந்திரமும் இருக்கின்றது

காஷ்மீரில் பாகிஸ்தானையும், அக்சாய் சின் பக்கம் சீனாவினையும் ஆக்கிரமிக்கவிட்ட நாடு இந்தியா. அதனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினை அதனால் நியாயபடுத்த முடியாது, நியாயபடுத்தினால் இந்தியாவின் பாகிஸ்தான் சீனா நிலைப்பாடு சிக்கலாகும்

இந்தியா அட்டகாசமான நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றது, வாழ்த்துக்கள் மோடி