ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் : ஹிட்லர்

ஜெர்மனியினை உலக நம்பர் 1 வல்லரசாக்குவேன் , முதலாம் உலகபோருக்கு பழிதீர்ப்பேன் என சொல்லி யுத்தம் தொடங்கினான் ஹிட்லர்

அது உலக‌ பேரழிவில் கிட்டதட்ட 5 கோடி மக்களை கொன்று ஓய்ந்தது, ஜெர்மனி நொறுங்கிகிடந்தது

பொதுவில் சொல்லகூடாத செய்தி அது, ஆனால் சொல்லியாக வேண்டும், போர் முடியும்பொழுது ஜெர்மானிய பெண்களில் பெரும்பாலோர் கர்ப்பமாக இருந்தனர், காரணம் அயல்நாட்டு படைகள்

போர்முடிந்ததும் ஜெர்மானியர் செய்த வேலை கட்டாய கருகலைப்பு, அவ்வளவு கொடுமைகள் இருந்தன‌

பின் இரு ஜெர்மனியாக உடைந்து மிக பலவீனமான நிலைக்கு சென்றபின் ஜெர்மானியர் சிந்தித்தார்கள், ஹிட்லர் எவ்வளவு பெரும் அழிவினை விட்டுவிட்டு சென்றுவிட்டான், அவனை பின்பற்றியது எவ்வளவு பெரும் தவறு என உணர்ந்தார்கள்

ஹிட்லரை தூக்கி எறிந்தார்கள், உலகோடு ஒட்டினார்கள், வளர்ந்தார்கள், இணைந்தார்கள்

இன்று ஐரோப்பாவின் நம்பர் 1 பொருளாதார வல்லரசு அவர்கள்தான், எங்கோ போய்விட்டார்கள்.

அந்த வளர்ச்சி நிலைபெற, நாடு அமைதியாக இருக்க கடந்த கால கசப்பான அனுபவங்களை மறக்க நினைக்கின்றார்கள்

ஹிட்லரின் பாதிப்பு இந்நாட்டில் இருக்கவே கூடாது என பாடபுத்தகங்களில் கூட மறைத்தார்கள், இக்கால சந்ததிகள் அந்த பெருமை எல்லாம் பேசாது. மாறாக ஹிட்லரை ஜெர்மன் மறக்கவேண்டும், அது ஒரு கெட்ட கனவு என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள்

இன்று எந்த ஜெர்மானியனும் ஹிட்லர் பற்றி பேசினால் முகத்தை திருப்புவான், பேச்சினை தவிர்ப்பான். அப்படி ஹிட்லர் அவர்களுக்கு அவமான சின்னமாக போய்விட்டான்

அவனை நினைத்து வெட்கபடுகின்றார்கள், அவன் பின் திரண்ட ஜெர்மனியினை நினைத்து மனவருத்தமே கொள்கின்றார்கள். காரணம் அந்த அழிவு அப்படி

ஹிட்லரின் கனவு நிறைவேற என சொல்லிகொண்டே போராடிகொண்டிருந்தால் இந்நேரம் ஜெர்மனி மிக மோசமாக அழிந்திருக்கும், இல்லாமலே போயிருக்கும்

ஆனால் அவர்கள் உண்மையினை உணர்ந்தார்கள், இதெல்லாம் சமூகத்திற்கும் இனத்திற்கும் ஒரு நன்மையும் கொண்டுவராது என சொல்லி ஹிட்லரை புதைத்துவிட்டார்கள்

அதனால் வளர்ந்தார்கள், இல்லையேல் இன்று இன்னும் நாசமாய் போயிருப்பார்கள். ஹிட்லரை உயர்த்திபிடித்துவிட்டு அவர்களால் மற்ற நாடுகளோடு உறவாடி வளர்ந்திருக்கமுடியாது

இதனை ஏன் சொல்கின்றோம் என்றால், இந்த பிரபாகரன் என்பவரும் அவனைபோலவே அழிவு சக்தி. அவரை தூக்கி பிடித்துகொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது மாறாக பெரும் குழப்பமும் வன்முறையுமே எதிர்காலத்தில் மிஞ்சும்.

ஒரு முடிவும் தீர்வும் கிடைக்கவே கிடைக்காது, இது மகா உண்மை.

என்று பிரபாகரனை தூர எறிந்துவிட்டு, அவனின் பாதிப்புகளை அகற்றிவிட்டு ஈழதமிழினம் போராடுமோ அன்றுதான் அவர்களுக்கு விடிவு கிடைக்கும்

தமிழக ஈழ அழிச்சாட்டியம் எல்லாம் சும்மா, ஒரு மிரட்டலில் அடங்கிவிடும். இங்கு எல்லாமே வியாபாரம்

அதனால் ஈழதமிழர்கள் ஜெர்மானியர் போல சிந்திப்பது நல்லது, இந்த தமிழக ஈழ வியாபாரிகளை நம்பாதீர்கள் நம்பினால் அவ்வளவுதான்

ஒருநாளும் விடியாது.