ஜெ சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார்? : தமிழிசை

எச்.ராஜா மணி விழா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

டெங்கு உட்பட பல பிரச்சினைகளில் தமிழகம் சிக்கி தவிக்கும்பொழுது பொறுப்பான பதவியிலிருக்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எல்லாம் எங்கு அணிவகுத்திருக்கின்றார்கள்?

ஸ்டாலினை பார்த்து பன்னீர் சிரித்தார் என்பதையே தாங்க முடியாத சசிகலா, இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து சிரிப்பதை கண்டால் எப்படி மயங்கிவிழுவாரோ?

ஆக எச்.ராசா மணிவிழாவிற்கு வந்தாயிற்று, அடுத்து எங்கே?

அது சங்கராச்சாரி விழாவாக இருந்தால் கூட இனி ஆச்சரியம் ஏதுமில்லை.

பெரியாரை தாறுமாறாக விமர்சிக்கும், திராவிட வெறுப்பு ராசாவின் வாசலுக்கே திராவிட கட்சிகளின் தலைவர்கள் சென்றபின் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை.


ஜெ., சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார் என்பதை தெளிபடுத்த வேண்டும்: தமிழிசை

வெங்கையா நாயுடுவும் ஆளுநரும்தான் அடிக்கடி சென்று பார்த்தார்கள் மேடம். இரண்டுமே உங்கள் கட்சிதான்.

அவர்கள்தான் விளக்க வேண்டும், அதனைத்தானே கேட்கின்றீர்கள், நல்லது.

என்ன இருதாலும் துணை ஜனாதிபதி, ஆளுநர் மீதே நெற்றிகண்ணை திறக்கும் தமிழிசையின் துணிச்சல் யாருக்கு வரும்?

என்ன இருந்தாலும் தமிழச்சி அல்லவா? அந்த வீரம் இருக்குமல்லவா?


சிவாஜிகணேசன் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற உறுப்பினர் கூட ஆக முடியவில்லை : ஜெயக்குமார்

எங்கே? தைரியம் இருந்தால் டி.ராஜேந்தர் கட்சி தொடங்கி முதல்வராக முடியவில்லை, அமைச்சராக முடியவில்லை என சொல்லுங்கள் பார்க்கலாம்

சொல்லிவிட்டு சும்மா இருந்துவிட முடியுமா? விடுவாரா டி.ஆர்.

அது இருக்கட்டும் அமைச்சரே, விஜயகாந்த் கட்சி தொடங்கி இருமுறையும் அவரால்தான் ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதாவது நினைவிருக்கின்றதா?


போகிற போக்கை பார்த்தால் எம்ஜிஆர் மீதான வெறுப்பினை சிவாஜி ரசிகர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் காட்டுவார்கள் போல..

ராமசந்திரனை செய்ய நினைத்து முடியாமல் போனதை ,ஜெயாவிடம் சிவாஜி அவமானபட்டதை எல்லாம் எல்லாம் இனி ஜெயக்குமாரிடம் செய்து பழி தீர்க்கலாம் என முடிவு செய்துவிட்டார்களோ என்னமோ,

அவ்வளவு வெறியில் இருக்கின்றார்கள்.